சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
சிக்கல் மேல் சிக்கல்... தடை மேல் தடை.... என சிம்பு நடித்த வாலு படம் வருடக்கணக்கில் வெளிவராமல் முடங்கிக் கிடக்கிறது. கடைசியாக சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் வாலு படத்தை தானே வெளியிட திட்டமிட்டார். அதிலும் பிரச்சனை ஏற்பட்டு வாலு படத்தை வெளியிட கோர்ட் தடை விதித்துவிட்டது. சுமார் 10 கோடி இருந்தால் வாலு படம் வெளியாகும் என்ற சூழலில், சிம்புவின் நிலையைக் கண்டு மனம் இரங்கிய விஜய் அவருக்கு பண உதவி செய்திருப்பதாக சில தினங்களாக செய்திகள் அடிபட்டு வருகின்றன. உண்மையில் என்ன நடந்தது?
சிம்புவுக்கு விஜய் பண உதவி ஏதும் செய்யவில்லை என்பதே உண்மை. வாலு படத்துக்கு கோர்ட் தடை உத்தரவு போட்டதால் அப்படத்தின் மீத நம்பிக்கை இழந்த பல விநியோகஸ்தர்கள் எங்களுக்கு வாலு படம் வேண்டாம்.. கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுங்கள் என்று கேட்க ஆரம்பித்துவிட்டனர். இதை கேள்விப்பட்ட விஜய் தன்னுடைய படங்களை வாங்கி வெளியிடும் விநியோகஸ்தர்களிடம் வாலு படத்துக்கு சப்போர்ட் பண்ணும்படி சொல்லி இருக்கிறார். அவர் செய்த இந்த உதவியைத்தான் பண உதவி செய்ததாக செய்தியை பரப்பி வருகின்றனர். இந்த வதந்தி சிம்பு தரப்பை கடும் மன உளைச்சலுக்குள்ளாக்கி இருக்கிறதாம். சக நடிகரிடம் பண உதவி பெறும்நிலையிலா நான் இருக்கிறேன்? என்று தன் சகாக்களிடம் வருத்தப்பட்டிருக்கிறார்