சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
தற்போது அஜீத்தின் பாசத்திற்குரிய தங்கை வேடத்தில் நடித்து வரும் லட்சுமிமேனன், நிஜத்திலும் அதிக செண்டிமென்டானவராம். குறிப்பாக, அவரது அம்மா மீது அதிக பாசம் கொண்டவராம் லட்சுமிமேனன். அதனால் அம்மா இல்லாமல் உறவினர்கள் துணையுடன் படப்பிடிப்புக்காக கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்தால், நேரம் கிடைக்கும்போதெல்லாம் அம்மாவுடன் போனில் பேசிக்கொண்டேயிருப்பாராம்.
அது மட்டுமின்றி, படப்பிடிப்பு தளத்தில் நடக்கிற விசயங்களையும் அம்மாவிடம் பகிர்ந்து கொண்டேயிருக்கும் லட்சுமிமேனன், தான் நடிக்கப்போகும் காட்சிகள் பற்றியும் கூறுவாராம். பின்னர் அந்த காட்சியில் நடித்த முடித்தபிறகு தான் இந்த மாதிரி நடித்ததாகவும் சொல்வாராம். அந்த அளவுக்கு இங்கே நடப்பதை உடனுக்குடன் அம்மாவுக்கு தெரியப்படுத்திக்கொண்டேயிருப்பாராம் லட்சுமிமேனன்.
மேலும், அவரது அம்மா உஷா மேனன், ஓகே செய்த கதைகளில் மட்டும்தான் நடிப்பாராம் லட்சுமிமேனன். காரணம், சில கதைகள் அவரது அம்மாவுக்கு பிடிக்காத நிலையில், இவர் ஓகே பண்ணி நடித்து எதிர்பார்த்தபடி வெற்றியை கொடுக்கவில்லையாம். அதனால் சமீபகாலமாக தனது அம்மா ஓகே சொல்லும் கதைகளில் மட்டுமே நடிப்பது என்கிற செண்டிமென்ட்டையும் கடைபிடித்து வருகிறாராம் லட்சுமிமேனன்.