சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
கோலிசோடா படத்தை இயக்கியவர் விஜய்மில்டன். அந்த படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிக்சர்ஸ் வெளியிட்டது. அதையடுத்து தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் விக்ரமை வைத்து பத்து எண்றதுக்குள்ள என்ற மெகா பட்ஜெட் படத்தை இயக்கியிருக்கிறார் விஜய் மில்டன்.
விக்ரம் இதுவரை நடித்ததில் இந்த படம் அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகியிருக்கிறது. அதோடு, ஜெமினிக்கு பிறகு ஒரு கலக்கல் நாயகனாக ஓப்பனிங் பாடலோடு என்ட்ரி கொடுத்து கலகலப்பு மூட்டுகிறாராம் விக்ரம். இந்த படத்தை விஜய் மில்டன் படமாக்கிய விதம் விக்ரமுக்கு பிடித்து விட்டதால், அரிமா நம்பி டைரக்டர் ஆனந்த் ஷங்கர் இயக்கும் மர்ம மனிதன் படத்துக்கு பிறகு மீண்டும் விஜய்மில்டன் இயக்கும் படத்தில் நடிக்க கால்சீட் கொடுத்து விட்டார் விக்ரம். மேலும், கோலிசோடா படத்தை வெளியிட்டபோது, எங்கள் நிறுவனத்துக்கு முன்னணி ஹீரோவை வைத்து ஒரு படம் இயக்கித்தர வேண்டும் என்று விஜய் மில்டனிடத்தில் லிங்குசாமி கேட்டுக்கொண்டிருந்தார். அதனால் அடுத்து விக்ரமை வைத்து தான் இயக்கும் படத்தை திருப்பதி பிலிம்சுக்கே இயக்குகிறாராம் விஜய் மில்டன். பத்து எண்றதுக்குள்ள படவேலைகள் முடிந்ததும் அந்த படத்துக்கான கதை விவாதத்தை தொடங்குகிறார் அவர்.