பிளாஷ்பேக்: 'கண்ணீர் திலகம்' ஸ்ரீரஞ்சனி | டைட்டானிக் கேப்டன் காலமானார் | ஐஸ்வர்யா லட்சுமி தோழிதான், காதலி இல்லை : அர்ஜூன் தாஸ் விளக்கம் | புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ |
சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட், ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் இணைந்து தயாரித்துள்ள இன்று நேற்று நாளை படம், கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன், ஜெயப்பிரகாஷ் நடித்துள்ளனர். தமிழ்நாடு முழவதும் 150 தியேட்டர்களில் வெளியான இந்தப் படம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் மட்டும் 3 கோடி வசூலித்துள்ளது. குறைந்த தியேட்டர்களில் வெளியாகி அதிக வசூலை குவித்த படங்களில் இது முதலிடத்தை பிடித்துள்ளது. தற்போது தியேட்டர்கள் அதிகப்பபடுத்தப்பட்டு வருகிறது. படத்தை வெளியிட்ட அபி அண்ட் அபி நிறுவனம்.. இதுவரை 50 தியேட்டர்களை அதிகப்படுத்தியுள்ளது.
இன்று நேற்று நாளைக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக அதன் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக இருக்கிறது. முதல் பாகம் தயாராகும்போதே இயக்குனர் ரவிகுமார் அதன் இரண்டாம் பாக கதையையும் முடிவு செய்து விட்டார். 2065ம் ஆண்டு விஞ்ஞானி ஆர்யா மீண்டும் டைம் மிஷினை 2015க்கு அனுப்புகிறார் என்பதிலிருந்து இரண்டாம் பாக கதை தொடங்குகிறது. இரண்டாம் பாகத்தில் முன்னணி ஹீரோ ஒருவர் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இதற்கான முறையான அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளிவரும் என்று தெரிகிறது.