Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தயாராகிறது இன்று நேற்று நாளையின் இரண்டாம் பாகம்

30 ஜூன், 2015 - 03:55 IST
எழுத்தின் அளவு:
Indru-Netru-Naalai-sequel-to-be-made

சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட், ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் இணைந்து தயாரித்துள்ள இன்று நேற்று நாளை படம், கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன், ஜெயப்பிரகாஷ் நடித்துள்ளனர். தமிழ்நாடு முழவதும் 150 தியேட்டர்களில் வெளியான இந்தப் படம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் மட்டும் 3 கோடி வசூலித்துள்ளது. குறைந்த தியேட்டர்களில் வெளியாகி அதிக வசூலை குவித்த படங்களில் இது முதலிடத்தை பிடித்துள்ளது. தற்போது தியேட்டர்கள் அதிகப்பபடுத்தப்பட்டு வருகிறது. படத்தை வெளியிட்ட அபி அண்ட் அபி நிறுவனம்.. இதுவரை 50 தியேட்டர்களை அதிகப்படுத்தியுள்ளது.


இன்று நேற்று நாளைக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக அதன் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக இருக்கிறது. முதல் பாகம் தயாராகும்போதே இயக்குனர் ரவிகுமார் அதன் இரண்டாம் பாக கதையையும் முடிவு செய்து விட்டார். 2065ம் ஆண்டு விஞ்ஞானி ஆர்யா மீண்டும் டைம் மிஷினை 2015க்கு அனுப்புகிறார் என்பதிலிருந்து இரண்டாம் பாக கதை தொடங்குகிறது. இரண்டாம் பாகத்தில் முன்னணி ஹீரோ ஒருவர் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இதற்கான முறையான அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளிவரும் என்று தெரிகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)