Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படப்பிடிப்பு நிறைவு

29 ஜூன், 2015 - 04:33 IST
எழுத்தின் அளவு:
VSOP-shooting-concluded

'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்திற்கு பிறகு இயக்குனர் ராஜேஷ், ஆர்யா, சந்தானம் மீண்டும் கூட்டணி சேர்ந்த 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தில் ஆர்யா ஜோடியாக தமன்னா முதன்முறையாக நடித்துள்ளார். சமீபத்தில் நாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று அறிவித்த சந்தானம், இயக்குனர் ராஜேஷுக்காகவும், ஆர்யாவுக்காகவும் அவருடைய கொள்கையைத் தளர்த்தி இந்தப் படத்தில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்துக் கொடுத்துள்ளார். இந்தப் படத்தில் இன்னொரு நாயகியாக 'தாமிரபரணி' பானு நடிக்கிறார். மற்றும் கருணாகரன், ரேணுகா, சித்தார்த் விபின், வெண்ணிற ஆடை மூர்த்தி, மற்றும் பலர் நடிக்கிறார்கள். இமான் முதன் முறையாக ராஜேஷ் இயக்கும் படத்திற்கு இசையமைக்கிறார். 'அழகுராஜா' படத்தின் தோல்விக்குப் பிறகும் தன்னை 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் தூக்கிவிட்ட ராஜேஷுக்காக ஆர்யாவே அவருடைய சொந்த நிறுவனம் மூலம் இப்படத்தைத் தயாரிக்கிறார். கடந்த நவம்பர் மாதம் படப்பிடிப்பை ஆரம்பித்து ஆறு மாதங்களுக்குள் முழுவதுமா முடித்துவிட்டார்கள். இறுதிக்கட்டப் பணிகள் ஆரம்பமாகி விட்டன. விரைவில் பட வெளியீட்டுத் தேதியை அறிவிக்க உள்ளார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)