சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
நடிகை த்ரிஷாவுக்கும், தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபர் வருண்மணியனுக்கும் நடக்கவிருந்த திருமணம் நிச்சயதார்த்தத்துடன் நின்று போனது அனைவருக்கும் தெரிந்ததே. இது பற்றி வருண் மணியன் இதுவரை எதுவும் சொல்லாத நிலையில், த்ரிஷாவின் அம்மா திருமணம் நின்று போனதைப் பற்றி ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இப்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் த்ரிஷாவும் அது பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்.
“திருமணம் நின்று போனது உண்மைதான். இது எதிர்பாராத ஒன்று, நம்மை மீறி ஒரு விஷயம் நடக்கும் போது, அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இப்போதைக்கு எனது கவனம் முழுவதும் நடிப்பின் மீதே இருக்கிறது. பழைய விஷயங்களைப் பற்றிப் பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை, அடுத்து என்ன நடக்கப் போகிறது என்றுதான் பார்க்க வேண்டும். என் வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது என்பதை கடவுளிடம் ஒப்படைத்து விட்டேன். நான் கடவுளின் குழந்தை, அவர் என்னை நன்றாகப் பார்த்துக் கொள்வார். கடவுளின் ஆசைப்படி எது நடக்கிறதோ அதை நான் ஏற்றுக் கொள்வேன்,” என்று சொல்லியிருக்கிறார்.