Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எல்லாமே கடவுளின் செயல் - த்ரிஷா

30 மே, 2015 - 12:39 IST
எழுத்தின் அளவு:
All-is-gods-grace-:-Trisha

நடிகை த்ரிஷாவுக்கும், தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபர் வருண்மணியனுக்கும் நடக்கவிருந்த திருமணம் நிச்சயதார்த்தத்துடன் நின்று போனது அனைவருக்கும் தெரிந்ததே. இது பற்றி வருண் மணியன் இதுவரை எதுவும் சொல்லாத நிலையில், த்ரிஷாவின் அம்மா திருமணம் நின்று போனதைப் பற்றி ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இப்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் த்ரிஷாவும் அது பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்.


“திருமணம் நின்று போனது உண்மைதான். இது எதிர்பாராத ஒன்று, நம்மை மீறி ஒரு விஷயம் நடக்கும் போது, அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இப்போதைக்கு எனது கவனம் முழுவதும் நடிப்பின் மீதே இருக்கிறது. பழைய விஷயங்களைப் பற்றிப் பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை, அடுத்து என்ன நடக்கப் போகிறது என்றுதான் பார்க்க வேண்டும். என் வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது என்பதை கடவுளிடம் ஒப்படைத்து விட்டேன். நான் கடவுளின் குழந்தை, அவர் என்னை நன்றாகப் பார்த்துக் கொள்வார். கடவுளின் ஆசைப்படி எது நடக்கிறதோ அதை நான் ஏற்றுக் கொள்வேன்,” என்று சொல்லியிருக்கிறார்.


அஜித்துடன் ஜோடியாக நடித்த பிறகு தற்போது கமல்ஹாசனுடன் ஜோடி சேரும் 'தூங்காவனம்' படம் மூலம் தன்னுடைய அடுத்த இன்னிங்சை பரபரப்பாக ஆரம்பித்துவிட்டார் த்ரிஷா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)