சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
கமல் நடித்த ''விருமாண்டி'' படத்தில் அவருடன் நடித்தவர் அபிராமி. அதற்கு முன்பு வரை கோடு போட்டு நடித்து வந்த அவர், அந்த படத்தில் கமலுடன் தாண்ணீருக்குள் கட்டிக்கலந்தாடி ரொமான்ஸ் செய்தார். ஆனால் அதன்பிறகு பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அபிராமி, பின்னர் தனது காதலரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார்.
ஆனால், அப்படி சென்றவரை பல வருடங்களுக்குப்பிறகு மீண்டும் தனது உத்தமவில்லன் படத்தில் டப்பிங் பேசுவதற்காக கமலே கோலிவுட்டுக்கு அழைத்து வந்தார். அப்படி வந்த அபிராமியை, ஜோதிகா நடித்த 36 வயதினிலே படத்தில் நடிக்க வைத்தனர். அப்படத்தில் கவனிக்கப்படும் கேரக்டரில் நடித்த அபிராமி இப்போது மேலும் சில டைரக்டர்களின் கவனத்துக்கும் வந்து விட்டார்.
இந்த நிலையில், தற்போது கமல் தூங்காவனம் படத்தில் நடிக்கும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அந்த படத்தில் தனக்கு ஒரு நல்ல கேரக்டர் தருமாறு கமலிடம் கேட்டிருக்கிறாராம் அபிராமி. ஆனால் அதற்கு இன்னும் கமல் பதில் கொடுக்கவில்லை என்றபோதும் நம்பிக்கையுடன் காத்திருக்கும் அபிராமி, அப்படி கமல் படத்தில் சான்ஸ் கிடைத்தால் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இன்னும் பெரிய அளவில் பிரபலமாகி விடலாம் என்றும் நினைக்கிறாராம்.