துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
மலையாள படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டதால், கேரளாவில் மேடை நாடகங்களில் நடித்து வரும் திலகன். தமிழில் மீண்டும் வில்லனாக நடிக்க வருகிறார்.
மலையாளத்தில் பிரபல நடிகர் திலகன். வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வந்த இவர் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தேசிய விருது, பத்மஸ்ரீ விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்ற திலகன், மலையாள திரைப்படத்துறை சங்கத்திற்கு எதிராக செயல்பட்டதால் அவர் மலையாள திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டார். இதனையடுத்து மேடை நாடகங்களில் மட்டும் நடித்து வந்தார். இந்நிலையில் தமிழில் மீண்டும் வில்லனாக நடிக்கவுள்ளார்.
"உயிரின் எடை 21 அயிரி" என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார். இந்தபடத்தை கதை, திரைக்கதை, இசை, இயக்கம் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்று ஹீரோவாகவும் நடிக்கிறார் இ.எல்.இந்திரஜித்.
படம்குறித்து இந்திரஜித் கூறியதாவது: "1908ல் டாக்டர் டங்கன் மெக்கடஹல் என்பவர் உயிரின் எடை எவ்வளவு என்பது குறித்து ஆராய்ச்சி செய்தார். இறப்பிற்கு பின்னர் மனித எடையில் இருந்து 21கிராம் குறைவதாக நிரூபித்தார். அதுவே உயிரின் எடை, இதை படத்தின் கதையுடன் சேர்த்து இருக்கிறேன். படத்தில் தாதவாக திலகன் நடிக்கிறார். அவருடைய அடியாளாக நான் நடிக்கிறேன். புதுமுகம் வினிதா ஹீரோயினாக அறிமுகமாகிறார். படத்தின் கதை என்னைச்சுற்றியே நகரும். வழக்கமான படங்களை போல் இல்லாமல் இந்தபடம் சற்று வித்தியாசமாக இருக்கும்" என்றார்.