புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
இளம் தலைமுறை நடிகைகளில் மிகச்சிறந்த நடிகையாய் பரிமளித்துக் கொண்டிருப்பவர் பார்வதி. சசி இயக்கிய பூ படத்தில் அறிமுகமான பார்வதி, மரியான் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அண்மையில் வெளியான உத்தம வில்லன் படத்தில் கமலுக்கு மகளாக நடித்திருந்தார் பார்வதி. சில காட்சிகளில் மட்டுமே முகம் காட்டினாலும் சிறப்பான முத்திரையை பதித்தார். அடுத்து வசந்த் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் பார்வதி.
பிரபல எழுத்தாளர் அசோகமித்ரன் எழுதிய தண்ணீர் என்ற கதையைத்தான் தன்னுடைய அடுத்தப் படமாக வசந்த் படமாக்குகிறாராம். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ள கதை இது. அதனால் இந்த கதைக்கு பார்வதிதான் மிகவும் பொத்தமாக இருப்பார் என்பதால் அவரை நடிக்க வைக்க முடுவு செய்துள்ளார் வசந்த். பணத்தைப் பற்றி கவலைப்படாமல், நடிக்க ஸ்கோப் உள்ள கதாபார்த்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருபவர் பார்வதி. இது சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.