Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'அரண்மனை 2' படத்தின் நாயகியாக த்ரிஷா...

04 மே, 2015 - 10:06 IST
எழுத்தின் அளவு:
Trisha-in-Aranmanai-part-2

தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் ஒரு முன்னணி நாயகிக்கு திருமணம் ஆகி விட்டாலே அவரை அத்துடன் அக்கா, அண்ணி வேடங்களில் நடிப்பதற்கு மட்டும்தான் அழைப்பார்கள். அவர் எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் இங்கு மட்டும் ஒரே நிலைமைதான். ஆனால், திருமண நிச்சயதார்த்தம் மட்டும் நடந்தால் அவரை நடிக்க அழைப்பார்கள் என்ற நிலையாக மாறிவிட்டது. அதிலும் அந்த நிச்சயதார்த்தம் நின்று விட்டதாக செய்தி வெளிவந்தால் பல படங்களில் நடிக்க அழைப்பார்கள் என்பது ஒரு எழுதாத சட்டமாக வந்து விட்டதோ என்று யோசிக்க வைக்கிறது.


இது த்ரிஷா விவகாரத்தில் நூற்றுக்கு நூறு உண்மையாகி வருகிறது. த்ரிஷாவுக்கும் வருண்மணியனுக்குமான திருமண விவகாரம் ஆரம்பமான உடனே அந்த விஷயத்தை 'என்னை அறிந்தால்' படம் வெளி வரும் வரை சொல்ல வேண்டாம் என இயக்குனர் கௌதம் மேனன் சொன்னதாகக் கூடச் சொன்னார்கள். ஆனால், அதற்கு முன்பே த்ரிஷா அவருடைய திருமணத்தைப் பற்றி வெளியில் சொன்னார். அதையும் மீறி 'என்னை அறிந்தால்' படம் வெளிவந்து த்ரிஷாவும் அவருடைய அழகாலும், நடிப்பாலும் அதிகம் பேசப்பட்டார்.


அதன் பின் த்ரிஷாவுக்குத் தொடர்ச்சியாக மேலும் பல புதிய வாய்ப்புகள் வந்து கொண்டேயிருந்தன. இதனிடையே, த்ரிஷா - வருண்மணியன் இடையிலான திருமணம், நிச்சயத்துடனே முடிவுக்கு வந்ததாக தமிழ், தெலுங்கு மீடியாக்கள் செய்திகளை எழுதி வந்தாலும் அவர்களிருவரின் தரப்பிலிருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகாமலே உள்ளது.


இதனிடையே த்ரிஷா, முதன் முறையாக சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார். “என்னுடைய இந்த சிறப்பான நாளில் சுந்தர்.சி இயக்கத்தில் முதல் முறையாக 'அரண்மனை 2' படத்தில் நடிக்கப் போவதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் படத்தில் சித்தார்த் ஜோடியாக நடிக்கிறேன். ஆயுத எழுத்து, நூவொஸ்தாவன்டே நேனொன்தன்டானா” ஆகிய படங்களுக்குப் பிறகு அவருடன் மூன்றாவது முறையாக ஜோடி சேர்கிறேன். என்னுடை டார்லிங் தோழியான குஷ்புவின் தயாரிப்பு நிறுவனத்தில், அவருடைய கணவர் இயக்கத்தில் நடிப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)