விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் |
விஜய்மில்டன் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள படம் ''பத்து எண்றதுக்குள்ள''. இந்த படத்தில் லாரி டிரைவராக பக்கா கமர்சியல் ஹீரோவாக நடிக்கிறார் விக்ரம். அவருக்கு ஜோடியாக சமந்தா 2 வேடங்களில் ஆக்டு கொடுத்துள்ளார். அவரது திறமைக்கு இந்த படம் ஒரு நல்ல சான்றாகவே அமைந்துள்ளது. மேலும், சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு குழு, இறுதியில் நேபாளத்தில்தான் முகாமிட்டிருந்தது. அப்படத்தின் க்ளைமாக்ஸ் நேபாளத்தில் முடிவதோடு, நேபாள பெண்ணாகவும் சமந்தா நடிப்பதால் அங்குதான் கடந்த சில வாரங்களுக்கு முன்புவரை பத்து எண்றதுக்குள்ள படப்பிடிப்பு நடந்தது.
ஆனால் அவர்கள் அங்கிருந்து ரிட்டனாகி சில நாட்களில் எதிர்பாராதவிதமாக நேபாளத்தில நிலநடுக்கம் ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழந்து விட்ட பரிதாப சம்பவம் நடந்துள்ளது. இந்த சேதியை கேட்டதில் இருந்து விக்ரம், விஜய்மில்டன் உள்பட அந்த படக்குழுவே கடும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது. காரணம் அவர்கள் முகாமிட்டு படப்பிடிப்பு நடத்தி வந்த ஏரியாவில் நிலநடுக்கம் அதிக சேதத்தை உண்டு பண்ணியுள்ளதாம்.
மேலும், பத்து எண்றதுக்குள்ள படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் கிட்டத்தட்ட நடந்து விட்டது என்றாலும், பேட்ஜ் ஒர்க் பண்ணுவதற்கு மீண்டும் அங்கு விசிட் அடிக்கவும் ஒரு திட்டம் இருந்ததாம். ஆனால், தற்போது அது மாற்றப்பட்டு சென்னையிலேயே அவற்றை படமாக்கப்போகிறார்களாம்.