சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
எனக்கு பிடித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தான், என, கிராமி விருது பெற்ற, பிரபல புல்லாங்குழல் இசை கலைஞர் வுட்டர் கெல்லர்மேன் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த பிரபலமான புல்லாங்குழல் இசைக் கலைஞர், வுட்டர் கெல்லர்மேன். திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இவர், ஏராளமான ஆல்பங்களையும் வெளியிட்டு உள்ளார். சிறந்த இசையமைப்புக்காக, கிராமி விருதையும் பெற்றுள்ளார்.
இசை நிகழ்ச்சி தொடர்பான விழாவில் பங்கேற்பதற்காக பெங்களூரு வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: சர்வதேச அளவில் எனக்கு பிடித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தான்; இதற்கான காரணம் உண்டு. அவரை போல், யாராலும் இசையமைக்க முடியாது; அவரின் சில இசைக்கோர்வைகளை போல், நானும் இசையமைக்க நினைத்தேன்; முடியவில்லை. தற்போது, லவ் லாங்குவேஜ் என்ற பெயரில், புதிய ஆல்பம் ஒன்றை தயார் செய்து வருகிறேன். இதில், பல்வேறு கலாசாரங்களை இசை மூலமாக வெளிப்படுத்தி உள்ளேன். இதில், 14 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. பல மொழிகளில் இந்த பாடல் வரிகள் உள்ளன; இரண்டு இந்திய மொழிகளிலும் பாடல்கள் உண்டு.
கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண், பல ஆண்டுகளுக்கு முன், தென் ஆப்ரிக்காவில் வசித்து வந்தார். அவர், என்னுடைய நெருங்கிய தோழியாக இருந்தார். அவர் மூலமாகவே, இந்திய கலாசாரங்கள் பற்றியும், இசை பற்றியும் எனக்கு தெரிந்தது. அதனால் தான், இந்திய இசை மீது எனக்கு ஆர்வம் வந்தது. இவ்வாறு, அவர் கூறினார்.