Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஏ.ஆர்.ரஹ்மனை போல் யாராலும் இசையமைக்க முடியாது - கிராமி விருது கலைஞர் பாராட்டு!

28 ஏப், 2015 - 11:06 IST
எழுத்தின் அளவு:
No-one-can-compose-music-like-AR-Rahman-says-Grammy-winner-Wouter-Kellerman

எனக்கு பிடித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தான், என, கிராமி விருது பெற்ற, பிரபல புல்லாங்குழல் இசை கலைஞர் வுட்டர் கெல்லர்மேன் பாராட்டு தெரிவித்து உள்ளார்.


தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த பிரபலமான புல்லாங்குழல் இசைக் கலைஞர், வுட்டர் கெல்லர்மேன். திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இவர், ஏராளமான ஆல்பங்களையும் வெளியிட்டு உள்ளார். சிறந்த இசையமைப்புக்காக, கிராமி விருதையும் பெற்றுள்ளார்.


இசை நிகழ்ச்சி தொடர்பான விழாவில் பங்கேற்பதற்காக பெங்களூரு வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: சர்வதேச அளவில் எனக்கு பிடித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தான்; இதற்கான காரணம் உண்டு. அவரை போல், யாராலும் இசையமைக்க முடியாது; அவரின் சில இசைக்கோர்வைகளை போல், நானும் இசையமைக்க நினைத்தேன்; முடியவில்லை. தற்போது, லவ் லாங்குவேஜ் என்ற பெயரில், புதிய ஆல்பம் ஒன்றை தயார் செய்து வருகிறேன். இதில், பல்வேறு கலாசாரங்களை இசை மூலமாக வெளிப்படுத்தி உள்ளேன். இதில், 14 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. பல மொழிகளில் இந்த பாடல் வரிகள் உள்ளன; இரண்டு இந்திய மொழிகளிலும் பாடல்கள் உண்டு.


கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண், பல ஆண்டுகளுக்கு முன், தென் ஆப்ரிக்காவில் வசித்து வந்தார். அவர், என்னுடைய நெருங்கிய தோழியாக இருந்தார். அவர் மூலமாகவே, இந்திய கலாசாரங்கள் பற்றியும், இசை பற்றியும் எனக்கு தெரிந்தது. அதனால் தான், இந்திய இசை மீது எனக்கு ஆர்வம் வந்தது. இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)