Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரே க்ளைமாக்ஸ் தான் - மணிரத்னம் வெளியிட்ட உண்மை..!

19 ஏப், 2015 - 12:24 IST
எழுத்தின் அளவு:
Maniratnam-clarifies-Thalapathi-climax-secret

கிட்டத்தட்ட 24 வருடங்களுக்கு முன் ரஜினிகாந்த், மணிரத்னம், இளையராஜா என தமிழ் சினிமாவின் முதல்வர்கள் இணைந்து கொடுத்த 'தளபதி' படம், ரஜினிக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கும் முக்கிய மைல்கல்தான். அதேபோல மலையாள சூப்பர்ஸ்டாராகிய மம்முட்டியையும் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவருக்கும் தமிழில் ஒரு புதிய வாசலை திறந்துவிட்டது.. மகாபாரதத்தின் கர்ணன் கதையை அன்றைய காலகட்டத்திற்கு ஏற்றால்போல மாற்றி தனது பாணியில் மணிரத்னம் படமாக்கியிருந்தார். இந்தப்படம் வெளியானபோது படத்தின் க்ளைமாக்ஸ் ரஜினிக்காக மாற்றப்பட்டதாக பரவலாக பேசப்பட்டது. காரணம் மம்முட்டியை துரியோதனனாகவும், ரஜினியை கர்ணனாகவும் சித்தரித்திருந்த மணிரத்னம், புராண வரலாறின்படி கர்ணனான ரஜினி எதிரிகளால் கொல்லப்படுவதாகத்தான் க்ளைமாக்ஸ் எடுத்திருந்தார் என்றும், இங்கே ரஜினி ரசிகர்கள் ரஜினி இறப்பது போன்ற காட்சியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால் ரஜினிக்கு பதிலாக மம்முட்டி கதாபாத்திரம் கொல்லப்படுவதாக மாற்றிவிட்டார் என்றும் பலராலும் நம்பப்பட்டது. அதேபோல இன்னொரு வதந்தியும் பரவியது. அதாவது, இந்தப்படம் கேரளத்தில் வெளியானபோது அங்கேயும் மம்முட்டி ரசிகர்கள், மம்முட்டி இறப்பது போல காட்டினால் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதால் ரஜினியின் கதாபாத்திரம் இறந்து விடுவதாகவும், மம்முட்டி உயிருடன் இருப்பதாகவும் மலையாளத்தில் தனி க்ளைமாக்ஸ் வைக்கப்பட்டது என்றும் கூட சொல்லப்பட்டது. தகவல் தொழில்நுட்பம் அவ்வளவாக வளராத அந்த காலத்தில் காற்றுவாக்கில் கசிந்த இந்த வதந்தி, பல வருடங்களாக உண்மை என்றே பேசப்பட்டு வருகிறது.


ஆனால் சமீபத்தில் மணிரத்னம் அளித்த ஒரு பேட்டியின்போது இந்த சந்தேகத்தை தெளிவுபடுத்தியுள்ளார். அதாவது தளபதி படத்திற்கு கதையை எழுதியபோதே ஒரே க்ளைமாக்ஸை மட்டும் தான் எழுதியதாகவும், அதுதான் படத்தில் இடம்பெற்றது எனவும் இரண்டு க்ளைமாக்ஸ்கள் மாற்றியதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்றும் தெரிவித்துள்ளார், இதன்மூலம் ரசிகர்களின் நீண்டகால சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மணிரத்னம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)