சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
கிட்டத்தட்ட 24 வருடங்களுக்கு முன் ரஜினிகாந்த், மணிரத்னம், இளையராஜா என தமிழ் சினிமாவின் முதல்வர்கள் இணைந்து கொடுத்த 'தளபதி' படம், ரஜினிக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கும் முக்கிய மைல்கல்தான். அதேபோல மலையாள சூப்பர்ஸ்டாராகிய மம்முட்டியையும் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவருக்கும் தமிழில் ஒரு புதிய வாசலை திறந்துவிட்டது.. மகாபாரதத்தின் கர்ணன் கதையை அன்றைய காலகட்டத்திற்கு ஏற்றால்போல மாற்றி தனது பாணியில் மணிரத்னம் படமாக்கியிருந்தார். இந்தப்படம் வெளியானபோது படத்தின் க்ளைமாக்ஸ் ரஜினிக்காக மாற்றப்பட்டதாக பரவலாக பேசப்பட்டது. காரணம் மம்முட்டியை துரியோதனனாகவும், ரஜினியை கர்ணனாகவும் சித்தரித்திருந்த மணிரத்னம், புராண வரலாறின்படி கர்ணனான ரஜினி எதிரிகளால் கொல்லப்படுவதாகத்தான் க்ளைமாக்ஸ் எடுத்திருந்தார் என்றும், இங்கே ரஜினி ரசிகர்கள் ரஜினி இறப்பது போன்ற காட்சியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால் ரஜினிக்கு பதிலாக மம்முட்டி கதாபாத்திரம் கொல்லப்படுவதாக மாற்றிவிட்டார் என்றும் பலராலும் நம்பப்பட்டது. அதேபோல இன்னொரு வதந்தியும் பரவியது. அதாவது, இந்தப்படம் கேரளத்தில் வெளியானபோது அங்கேயும் மம்முட்டி ரசிகர்கள், மம்முட்டி இறப்பது போல காட்டினால் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதால் ரஜினியின் கதாபாத்திரம் இறந்து விடுவதாகவும், மம்முட்டி உயிருடன் இருப்பதாகவும் மலையாளத்தில் தனி க்ளைமாக்ஸ் வைக்கப்பட்டது என்றும் கூட சொல்லப்பட்டது. தகவல் தொழில்நுட்பம் அவ்வளவாக வளராத அந்த காலத்தில் காற்றுவாக்கில் கசிந்த இந்த வதந்தி, பல வருடங்களாக உண்மை என்றே பேசப்பட்டு வருகிறது.