சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா நடித்துள்ள மாஸ் படத்துக்கு சிக்கல் மேல் சிக்கல் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. மே 15 ஆம் தேதி மாஸ் படம் ரிலீஸ் என்று அப்படத்தைத் தயாரிக்கும் ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் அறிவித்தது. இப்படியொரு அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே, மாஸ் படத்தின் இசையமைப்பாளரான யுவன்சங்கர்ராஜா டாட் தரவில்லை என்றும் அதனால் மாஸ் படத்தின் ஆடியோ ரிலீஸ் செய்ய முடியவில்லை என்றும்.... அதன் காரணமாக மாஸ் படம் மே 15 அன்று வெளிவர வாய்ப்பில்லை என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில் மாஸ் படத்தின் ஆடியோ வெளியீட்டில் இன்னொரு பிரச்சனையும் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மாஸ் படத்துக்கு யுவன்சங்கர்ராஜாதான் இசையமைப்பாளர் என்றாலும், ஒரேயொரு பாடலுக்கு தமன் இசையமைத்துக் கொடுத்தார். அதுதான் தற்போது மாஸ் படத்துக்கு தலைவலியாக மாறி இருக்கிறது. தமன் இசையமைத்துக் கொடுத்த அந்தப் பாடல் தெலுங்குப்படம் ஒன்றின் ட்யூன்.
சம்மந்தப்பட்ட தயாரிப்பாளரிடம் அனுமதி வாங்கிக் கொள்ளலாம் என்ற தைரியத்தில் அந்த ட்யூனை மாஸ் படத்திற்கு பயன்படுத்திவிட்டனர். பாடல் ரெடியான சில தினங்களிலேயே கோடிக்கணக்கில் செட் போட்டு பாடல்காட்சியையும் படமாக்கிவிட்டனர். இந்த விஷயத்தைத் தெரிந்து கொண்டதும் குறிப்பிட்ட அந்த ட்யூனை மாஸ் படத்தில் பயன்படுத்தக் கூடாது என்று சொல்விட்டாராம் சம்மந்தப்பட்ட படத்தின் தயாரிப்பாளர். இதனால் கோடிக்கணக்கில் செலவு செய்து படமாக்கப்பட்ட பாடல்காட்சியை மாஸ் படத்தில் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, தெலுங்குப்படத்தின் தயாரிப்பாளர் அந்தப்பாடலுக்கு அனுமதி கடிதம் கொடுத்தால்தான் மாஸ் ஆடியோவை வெளியிடுவோம் என்று ஆடியோ நிறுவனமும் கறாராக சொல்லிவிட்டதாம். மொத்தத்தில் மே மாதம் மாஸ் படம் வெளி வர வாய்ப்பே இல்லை என்று பேசிக்கொள்கிறார்கள்.