Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சுஹாசினி பேச்சு, சமூக வலைத்தளங்களில் சலசலப்பு...

13 ஏப், 2015 - 03:52 IST
எழுத்தின் அளவு:
Suhashini-speech-in-social-networks

மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் 'ஓ காதல் கண்மணி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இரு தினங்களுக்கு முன் நடைபெற்றது. அப்போது பேசிய மணிரத்னத்தின் மனைவியும், நடிகையுமான சுஹாசினி, “உங்க எல்லாருக்கும் ஒண்ணு சொல்றேன், எங்களை விட பலம் வாய்ந்த பேனாவை நீங்க கையில வச்சிக்கிட்டிருக்கீங்க. எப்படி குவாலிஃபைட் பியூப்பிள்தான் படத்துல நடிக்க முடியுமோ, சினிமாட்டோகிராபி பண்ண முடியுமோ, ரகுமான் மாதிரி மியூசிக் தெரிஞ்சவங்கதான் மியூசிக் பண்ண முடியுமோ, அதே மாதிரி எழுதத் தெரிஞ்சவங்கதான், விமர்சனம் எழுதணும்.


நீங்கள்லாம் இருக்கும் போது, எல்லாரையும் எழுத விட்றாதீங்க. முதல்ல நீங்க வந்து இந்தப் படத்தைப் பார்த்துட்டு, இந்தப் படத்தைப் பத்தின விஷயங்களை எழுதுங்க. இப்ப கம்ப்யூட்டர் உலகத்துல, மவுசை மூவ் பண்ண தெரிஞ்சவங்கள்லாம் எழுத்தாளர் ஆகிட்டாங்க. அப்படி விட வேண்டாம், நீங்கள்லாம் இவ்வளவு குவாலிஃபைடா இருக்கும் போது, எதுக்கு மத்தவங்களை எழுத விடறீங்க. உங்களை நம்பிதான் நாங்க இருக்கோம், இந்தப் படத்தைப் பத்தி நல்லா எழுதுங்கன்னு வேண்டிக்கிறேன்,” என வெளிப்படையாகப் பேசினார்.


சுஹாசினியின் இந்தக் கருத்துக்கு கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் சகட்டு மேனிக்கு 'கமெண்ட்' அடித்து எழுதுபவர்கள், சுஹாசினியின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக பல கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.


சமீப காலமாக ஒரு நடிகரின் ரசிகர்களுக்கும், வேறொரு நடிகரின் ரசிகர்களுக்கும் இடையே நடக்கும் மோதல்களில் சமூக வலைத்தளங்கள் ஒரு அடித்தளமாக பயன்பட்டு வருகிறது. சில கருத்துக்கள் படங்களைப் பற்றியும் மீறி அவர்களது தனிப்பட்ட விஷயங்களைப் பற்றித் தரக்குறைவாகவும் சித்தரிக்கும் விதமாகவும் மாறி வருகிறது.


எப்படி சமூக வலைத்தளங்களில் அவரவர்க்கு கருத்துக்களைச் சொல்ல உரிமை இருக்கிறேதோ, அதே போலத்தான் சுஹாசினியும் அவருடைய கருத்தைச் சொல்லியிருக்கிறார்.


டிஜிட்டல் காமிராக்களின் வளர்ச்சியால் இன்று பல பேர் படம் எடுக்கக் கிளம்பி வந்து விட்டதைப் போல, ஃபேஸ்புக், டிவிட்டரிலும் பல பேர் விமர்சனம் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். அதைக் கிண்டலும், கேலியுமாக பலர் இன்னும் 'ஷேர்' செய்வதும் அதிகரித்து வருவது திரையுலகத்திற்கு பாதகமாகவே அமைந்து வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)