புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
யுத்தம் செய் படத்தில் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. அதையடுத்து மேகா படத்தில் முழு கதாநாயகியாக நடித்தார். பின்னர் டார்லிங், எனக்குள் ஒருவன் படங்களில் கேரக்டர் வேடங்களில் நடித்த அவரது கைவசம் தற்போது அச்சமின்றி, வில் அம்பு, கத்துக்குட்டி, நவரச திலகம் உள்பட அரை டஜன் படங்கள் உள்ளன. இதனால் இந்த படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக திரைக்கு வரும்போது அவர் முன்னணி நடிகையாகி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, மேகா படத்தில் நடித்தது போலவே இந்த படங்களிலும் ஹோம்லியான வேடங்களிலேயே நடித்து வருகிறார் சிருஷ்டி டாங்கே. இந்த நேரத்தில் ஆரம்பத்தில் அவர் நடித்து கிடப்பில் போடப்பட்டிருந்த ஒரு நொடியில் என்ற படம் தூசு தட்டப்பட்டு வெளியாக தயாராகிக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த சேதியறிந்து கடும் அதிர்ச்சியில் இருக்கிறார் சிருஷ்டி டாங்கே. காரணம், இந்த படத்தில் அவர் படுகவர்ச்சியாக நடித்திருக்கிறாராம். சினிமாவைப்பற்றி சரியாக தெரியாத நேரத்தில் கமிட்டாகி நடித்த படம் என்பதால் ஆடைகளுக்கு அளவுக்கதிகமாக சுதந்திரம் கொடுத்து நடித்து விட்டாராம். ஆனபோதும் அப்படம் கிடப்பில் கிடந்ததால் தனது ஹோம்லியான இமேஜ்க்கு எந்த களங்கமும் ஏற்படாது என்று அவர் நினைத்திருந்த நேரத்தில் தற்போது அப்படம் தூசு தட்டப்பட்டிருப்பதால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார் சிருஷ்டி டாங்கே. காரணம், இந்த படத்தைப்பார்த்து விட்டு இனிமேல் தன்னிடம் கதை சொல்ல வருபவர்கள் அனை வருமே குடும்பக் கதைகளில்கூட இரண்டு கவர்ச்சி சீன்களை வைத்து கதை சொல்வார்களே என்று குழம்பிப்போயிருக்கிறார் நடிகை.