சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
தெலுங்கு நடிகையான ரோஜா, செம்பருத்தி படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். பின்னர் ரஜினி,விஜயகாந்த் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து உச்ச நடிகையாக வளர்ந்தார். அதோடு, தன்னை சினிமாவில் ஆளாக்கிய டைரக்டர் ஆர்.கே.செல்வமணியையே திருமணம் செய்து கொண்டார்.
மேலும், சினிமாவில் முன்னணி நாயகியாக இருந்தபோதே அரசியல் கட்சிகளில் தன்னை இணைத்துக்கொண்டு தேர்தல் பிரசாரம் செய்து வந்த ரோஜா, சமீபகாலமாக ஆந்திராவில் எம்.எல்.ஏ.வாக போட்டியிட்டு வெற்றி பெறும் அளவுக்கு பெரிய அரசியல்வாதியாகி விட்டார்.
அதனால், தொகுதி மக்களுக்கு அங்கிருந்தபடியே சேவையும் செய்து வருகிறார். அதோடு, ரோஜாவுக்கு தெய்வ நம்பிக்கை அதிகம். அதனால் சக்திவாய்ந்த கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வரும் அவர், ஆந்திராவில் ஒரு லிங்கேஸ்வரன் கோயிலுக்கு தனது பெயரில் ஒரு மண்டபம் கட்டிக்கொடுத்திருக்கிறார்.
இப்படி ரோஜா மண்டபம் கட்டிக்கொடுத்து லிங்கேஸ்வரன் கோயிலில் சமீபத்தில் விஜய் நடித்து வரும் புலி படத்தின் சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டிருக்கிறது. 4 வில்லன்களை விஜய் துரத்தி துரத்தி பந்தாடும் அந்த காட்சி அங்கு படமாக்கப்பட்டபோது எதிர்பாராதவிதமாக ஒருநாள் ரோஜாவும் அந்த கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தாராம். அப்போது அங்கு விஜய் படப்பிடிப்பு நடக்கிற சேதியறிந்து, ஸ்பாட்டுக்கு வந்து அவரை சந்தித்து சிறிது நேரம் பேசிவிட்டு சென்றிருக்கிறார் ரோஜா.