புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
நடிகை சிருஷ்டி டாங்கே தற்போது நிறைய படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அவற்றில் முக்கியமானது விஜய் வசந்துடன் நடிக்கும் அச்சமின்றி. இதனை விஜய் வசந்தின் தம்பி வினோத்குமார் தயாரிக்கிறார். சமுத்திரக்கனி, கருணாஸ், சரண்யா, பரத் ரெட்டி, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். ஏ.வெங்டேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பிரேம்ஜி அமரன் இசை அமைக்கிறார்.
இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் சென்னை விமான நிலையம் அருகில் உள்ள பின்னி மில்லில் நடந்து வருகிறது. கிளைமாக்ஸ் காட்சியை முன்னதாகவே எடுத்து வருகிறார்கள். கடந்த நான்கு நாட்களாக விஜய் வசந்த் வில்லன்களுடன் மோதி சிருஷ்டி டாங்கேவை காப்பாற்றுகிற காட்சியை எடுத்தார்கள். இதில் விஜய் வசந்த், சிருஷ்டியை தரதரவென இழுத்துச் செல்லும் காட்சியில் கீழே கிடந்த இரும்பி கம்பி தடுக்கி கீழே விழுந்தார் சிருஷ்டி. இதனால் அவருக்கு காலில் சதைபிடிப்பு ஏற்பட்டது. உடனடியாக டாக்டர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் சிருஷ்டி இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டது. மறுநாள் முதல் சிருஷ்டி நடிக்க ஆரம்பித்தார்.
"நாங்கள் டூப் போட்டு எடுத்துக் கொள்கிறோம் என்றுதான் சிருஷ்டியிடம் கூறினோம். அவர்தான் நானே நடிக்கிறேன் என்று ரிஸ்க் எடுத்தார். பலத்த காயம் ஏற்பட்டாலும் மறுநாளே நடிக்க வந்தார். அவரது டெடிக்கேஷனை பார்த்து பிரமித்து விட்டோம்" என்கிறார் இயக்குனர் ராஜபாண்டி.