அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் | சீதா ராமன் தொடரில் என்ட்ரி கொடுத்த தீபா : இனி கதையே மாறப்போகுதாம் |
இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். மூன்றாவது முறையாக முஸ்லிமாக மதம் மாறி கீழக்கரையைச் சேர்ந்த ஜெபருன்னிசா என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் யுவனின் தங்கை பவதாரிணி தவிர வேறு யாரும் கலந்து கொள்ளவில்லை. தன் திருமணம் மற்றும் மதமாற்றம் குறித்தும் இதுவரை யுவன் பேசியதில்லை. நேற்று (மார்ச் 29) ஒரு இசை நிகழ்ச்சி தொடர்பாக அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது முதன் முறையாக தன் மதமாற்றம், திருமணம் பற்றி பேசினார்.
அவர் கூறியதாவது: மதம் மாறியது எனது தனிப்பட்ட விஷயம். பிடித்திருந்தது மாறினேன். அதுபற்றி மேலும் பேசுவதற்கு எதுவுமில்லை. என் மதமாற்றம், திருமணம்... எதற்கும் அப்பா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. உனக்கு எது மகிழ்ச்சியாக இருக்கிறதோ அதைச் செய் என்று சொல்லிவிட்டார். திருமணம் ரகசியமாக நடந்தது போன்று மீடியாக்களில் செய்திகள் வந்தது. ஒரு இஸ்லாமிய திருமணம் எப்படி நடக்குமோ அப்படி நடந்தது. என் குடும்பத்தினர் கலந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் பெண் வீட்டார் 2 நாட்களுக்குள் திருமணத்தை நடத்த விரும்பியதால் அந்த குறுகிய கால இடைவெளிக்குள் அவர்களால் கலந்து கொள்ள முடியவில்லை. திருமணம் முடிந்த மறுநாளே மனைவியுடன் சென்று அப்பாவிடம் ஆசி பெற்றேன்.
எனது பெயரை இஸ்லாமிய பெயராக மாற்றி இருந்தாலும், சினிமாவில் யுவன்சங்கர் ராஜா என்றே இருக்கும். அந்த பெயரில் அறிமுகமாகித்தான் புகழ்பெற்றேன். திடீரென்று பெயரை மாற்றினால் ரசிகர்களுக்கு குழப்பம் வரும். அதனால் யுவன் என்கிற பெயரே தொடரும்.
இவ்வாறு யுவன் கூறினார்.