புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
இதற்கு முன் அதாவது கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு முன் தமிழுக்கு சிம்ரன் அறிமுகமானபோது, ஒரே நேரத்தில் 'நேருக்கு நேர்', 'வி.ஐ.பி', 'ஒன்ஸ்மோர்', 'பூச்சூடவா' என நான்கு படங்களில் நடித்தார். நான்கு படங்களும் ஒரே வருடத்தில் வெவ்வேறு தேதிகளில் முன்னே பின்னே ரிலீசனாலும், சிம்ரனுக்கு கிடைத்த வரவேற்பால் ஒவ்வொருவரும் நாங்கள் தான் சிம்ரனை அறிமுகம் செய்தோம் என பெருமைப்பட்டுக்கொண்டார்கள். அப்போது சிம்ரனுக்கு நடந்த நிகழ்வு, அதற்கடுத்து இப்போது மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷுக்கு நடக்கிறது.
மலையாளத்தில் திலீப்புடன் இவர் நடித்த 'ரிங் மாஸ்டர்' படத்தை பார்த்தவர்கள் இவரது எளிமையான அழகில் மயங்கிப்போனார்கள். இவரது அம்மா மேனகாவும் தமிழ் நடிகை என்பது இவருக்கு கூடுதல் தகுதியாகிப்போனது. சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன்' படத்திள் நடிப்பதற்காக தமிழுக்கு வந்த கீர்த்தி சுரேஷ், அடுத்து விக்ரம் பிரபுவுடன் 'இது என்ன மாயம்' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். தொடர்ந்து 'பாம்பு சட்டை படத்தில் சிம்ஹாவுக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்ப்பையும் ஏற்றார். அடுத்து இயக்குனர் டீகேவின் 'கவலைவேண்டாம்' படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழில் இன்னும் ஒரு படம் கூட வெளியாகாத நிலையில் கீர்த்தி சுரேஷுக்கு இந்த அளவுக்கு வரவேற்பு இருப்பது சிம்ரன் காலகட்டத்தைத்தான் ஞாபகப்படுத்துகிறது. ஆனால் அடுத்ததாக ஒரு மலையாளப்படத்தில் கூட நடிக்க இவர் ஒப்பந்தமாகவில்லை என்பதை பார்த்தால் அசின், நயன்தாரா பாணியில் மலையாளத்தை சுத்தமாக மறந்துவிட்டு இங்கேயே செட்டிலாகி விடுவார் போலத்தான் தெரிகிறது.