புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
கமல்ஹாசன் வரவர நடிப்பு தொழிற்சாலையாக மாறிக்கொண்டிருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. தற்போது உத்தம வில்லவன், விஸ்வரூபம் 2, பாபநாசம் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவற்றில் உத்தம வில்லவன் படம் அடுத்த மாதம் வெளிவரும் என சொல்லப்படுகிறது. மற்ற படங்கள் எப்போது வெளியாகும் என கமல் மற்றும் கடவுளுக்குத்தான் தெரியும்.
இந்நிலையில் அமீர்கான் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான பிகே படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் கமல். உத்தம வில்லவன் படம் வெளியான பிறகு இது பற்றிய அறிவிப்பு முறைப்படி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு படங்கள் கைவசம் வைத்துள்ள கமல், ஐந்தாவதாக மற்றொரு படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். வாசன் விஷுவல் வெஞ்சர்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகவிருக்கும் புதிய படமொன்றை பிரபுதேவா இயக்க உள்ளார். இந்தப்படத்தில்தான் கமல் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். படத்தில் பணியாற்றவிருக்கும் நட்சத்திரங்கள், டெக்னீஷியன்களுடன் கூடிய அதிகாரபூர்வ அறிவிப்பு சில தினங்களில் வெளியாகுமாம். விரைவில் பிரபுதேவா இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் கமல் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கமல், பிரபுதேவா இருவரும் இணைந்து நடித்து 1998 ஆம் ஆண்டு வெளிவந்த படம் காதலா காதலா. சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருந்த படம் அது. இப்படத்தின் நாயகர்களான கமலும், பிரபுதேவாவும் 17 வருடத்துக்குப் பிறகு இப்போது மீண்டும் இணையவிருக்கிறார்கள். இந்த முறை பிரபுதேவா இயக்குநராகவும், கமல் நடிகராகவும் இணைகின்றனர். போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி என தமிழில் இதுவரை நான்கு படங்களை இயக்கிய பிரபுதேவா தமிழில் இயக்கும் ஐந்தாவது படம் இது.