ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
லிங்கா படம் வெளியான மூன்றாவது நாளில் இருந்தே கலெக்சன் இல்லை என்று அந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் கொடி பிடிக்கத் தொடங்கி விட்டனர். விளைவு, ஒரு வாரத்துக்கு தியேட்டரில் ஹவுஸ்புல்லாக இருக்கும். அதனால், ஒரு வாரம் கழித்து படத்தை பார்க்கலாம் என்று நினைத்திருந்த ரசிகர்கள்கூட அதன்பிறகு தியேட்டருக்கு செல்லவில்லை.
ஆக, லிங்கா படம் ஓடவில்லை தோல்வியடைந்து விட்டது என்று அதன்பிறகு தங்களுக்கு ஏற்பட்ட நஷ்ட ஈட்டைக்கேட்டு அப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். பின்னர், ரஜினிக்கு நெருக்கமானவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இப்போது மெகா பிச்சை போராட்டத்தை நடத்தவும் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.
அதனால் பிரச்சினை பெரிய அளவில் சூடு பிடித்து நிற்கிறது. கூடவே, ரஜினிக்கு ஆதரவாக களமிறங்க அவரது ரசிகர்களும் தயார் நிலையில் இருக்கிறர்கள். ஆனால், இந்த நேரத்தில், சரத்குமார், விஜய் இருவரும்தான் ரஜினியை நஷ்டஈடு தர விடாமல் தடுப்பதாக இன்னொரு செய்தியும் ஓடிக்கொண்டிருக்கிறது.