'உஸ்தாத் பகத் சிங்' விழாப் பேச்சு : மன்னிப்பு தெரிவித்த பார்த்திபன் | கோடையில் வெளி வர காத்திருக்கும் படங்கள் | பாலிவுட்டில் அடுத்த வாய்ப்பு : தாக்கு பிடிப்பாரா கீர்த்தி சுரேஷ் | ''காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்'': ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரஜினி 'பஞ்ச்' | சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா | 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' விருதுகளை குவித்தது எப்படி? | ஒரே படத்தில் நான்கு நாயகிகள் | பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் | 'ஹேப்பிராஜ்' படத்தால் ஜி.வி.பிரகாஷ் ஹேப்பி | பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு |

லிங்கா படம் வெளியான மூன்றாவது நாளில் இருந்தே கலெக்சன் இல்லை என்று அந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் கொடி பிடிக்கத் தொடங்கி விட்டனர். விளைவு, ஒரு வாரத்துக்கு தியேட்டரில் ஹவுஸ்புல்லாக இருக்கும். அதனால், ஒரு வாரம் கழித்து படத்தை பார்க்கலாம் என்று நினைத்திருந்த ரசிகர்கள்கூட அதன்பிறகு தியேட்டருக்கு செல்லவில்லை.
ஆக, லிங்கா படம் ஓடவில்லை தோல்வியடைந்து விட்டது என்று அதன்பிறகு தங்களுக்கு ஏற்பட்ட நஷ்ட ஈட்டைக்கேட்டு அப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். பின்னர், ரஜினிக்கு நெருக்கமானவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இப்போது மெகா பிச்சை போராட்டத்தை நடத்தவும் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.
அதனால் பிரச்சினை பெரிய அளவில் சூடு பிடித்து நிற்கிறது. கூடவே, ரஜினிக்கு ஆதரவாக களமிறங்க அவரது ரசிகர்களும் தயார் நிலையில் இருக்கிறர்கள். ஆனால், இந்த நேரத்தில், சரத்குமார், விஜய் இருவரும்தான் ரஜினியை நஷ்டஈடு தர விடாமல் தடுப்பதாக இன்னொரு செய்தியும் ஓடிக்கொண்டிருக்கிறது.