நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வருகிற 23ந் தேதி முதல் ஒளிரப்பாகும் புதிய தொடர், ''அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்''. இதில் திரைப்பட குணசித்திர நடிகை லட்சுமி உள்பட 6 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். அசோக்குமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார். செய்யாறு ரவி இயக்குகிறார். சத்யஜோதி தியாகராஜன் தயாரிக்கிறார்.
கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழாவில் தான் காதலித்து மணந்த கணவனுடன் சந்தோஷமாக வாழ்கிறார் அன்னக்கொடி. திடீரென்று ஒரு நாள் கணவன் கடத்தப்படுகிறான். அவனைத் தேடி தன் ஐந்து மகள்களுடன் தமிழ்நாட்டுக்கு வருகிறார். அப்போதுதான் கணவன் தென்காசியை சேர்ந்தவன் என்றும் பெரிய ஜமீன் குடுபத்து வாரிசு என்றும் தெரிய வருகிறது. ஊர் மக்களும், ஜமீன் குடும்பமும் அன்னக்கொடியையும் அவளது மகள்களையும் துரத்தி அடிக்கிறது. அதையும் மீறி அன்னக்கொடி கணவனை எப்படி மீட்கிறார் என்கிற கதை. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.