சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
கடந்த வருடம் வெளியான ஹாரர் படங்களில் வணிக ரீதியாக வெற்றிப் பெற்ற படம் - யாமிருக்க பயமே. ஆர்.எஸ்.இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்தை டிகே என்ற புதுமுக இயக்குநர் இயக்கியிருந்தார். இந்தப் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாகம் தயாரிக்க இருப்பதாக அப்போது சொல்லப்பட்டது. ஆனால் அதன் பிறகு அது சம்பந்தமான தகவல்கள் எதுவும் வரவில்லை! இந்நிலையில், ஆர்.எஸ்.இன்ஃபோடெய்ன்மென்ட் தயாரிப்பில் அடுத்து படத்தை டிகே இயக்குகிறார். இது யாமிருக்க பயமே படத்தின் இரண்டாவது பாகமா என்பது குறித்து அதிகாரபூர்வ தகவல் ஏதும் இல்லை. இப்படத்தில் ஜீவா ஹீரோவாக நடிக்கிறார்.
ஆர்.எஸ்.இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனத்தின் படத்தில் ஜீவா மீண்டும் நடிப்பது திரைத்துறையில் ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது. காரணம்...ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கத்தில், ஜீவா நடிப்பில் வெளியான யான் படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. 11 கோடியில் படம் எடுப்பதாக கூறிவிட்டு, 20 கோடிவரை செலவை இழுத்துவிட்டார் என ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் மீது குற்றம்சாட்டினார் ஆர்.எஸ்.இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனத்தை சேர்ந்த தயாரிப்பாளர் எல்ரெட் குமார். அதுமட்டுமல்ல, ரவி.கே.சந்திரன் உடன் சேர்ந்து கொண்டு ஜீவாவும் பட்ஜெட்டை அதிகமாக்கிவிட்டார் என்று சொன்னார். இப்படி சொன்ன அதே தயாரிப்பாளர் தற்போது ஜீவாவை வைத்து மறுபடியும் படம் தயாரிப்பதுதான் படத்துறையினரின் வியப்புக்குக் காரணம்!