புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
மாப்பிள்ளை படத்தில் தனுசுடன் நடித்தபடி கோலிவுட்டுக்கு வந்த ஹன்சிகா, ஆரம்பத்தில் ஹீரோக்களுடன் எப்படி நட்பு வளர்ப்பது என்பது தெரியாமல்தான் இருந்தார். ஸ்பாட்டில் தன்னருகே ஹீரோக்கள் அமர்ந்தாலும், அவர்களிடம் பேசாமல் செல்போனில் கேம் விளையாடியே பொழுதை கழித்து வந்தார்.
அப்படியே யாராவது ஏதாவது பேச்சுக்கொடுத்தால், அம்மாவை கைகாட்டி விட்டு விட்டு தான் கழண்டு கொள்வார். ஆனால், சிம்புவுடனான காதலில் விழுந்து எழுந்தபோது, அவர் தெளிவு பெற்றதாக உணர்ந்த அவரது தாய்குலம் அதன்பிறகு படப்பிடிப்பு தளங்களுக்கு அவருடன் வருவதில்லை. பல சமயங்களில் மும்பையிலேயே முகாமிட்டிருந்தார்.
இதனால், தனது சகோதரனுடன் ஸ்பாட்டுக்கு வரத் தொடங்கிய ஹன்சிகா, அம்மா இல்லாததால மற்றவர்கள் கேட்கும கேள்விகளுக்கு தான் பதில் சொல்லத் தொடங்கியவர், உடன் நடிக்கும் ஹீரோக்களிடமும் அரட்டை அரங்கத்தை ஆரம்பித்தார். குறிப்பாக, எங்கேயும் காதல் படத்தில் நடித்தபோது ஜெயம்ரவியுடன் நட்பு வளர்க்காத ஹன்சிகா, இப்போது ரோமியோ ஜூலியட்டில் நடித்தபோது பெஸ்ட் ப்ரண்டாகி விட்டார். அதையடுத்து, சேட்டையில் நடித்தபோது ஆர்யாவுடன் இடைவெளி விட்டு பழகியவர், இப்போது மீகாமனில் நடித்தபோது பின்னி பிணைந்து விட்டார்.
இந்த நிலையில், ஆம்பள படத்தில் நடித்தபோது விஷாலுடனும் நட்பு வளர்த்து விட்டார். விளைவு, எனது பெஸ்ட் ப்ரண்டு பட்டியலில விஷாலுக்கும் ஒரு முக்கிய இடம் உள்ளது என்று கூறும் ஹன்சிகா, உடன்நடிக்கும ஹீரோயின்களை ரொம்பவே மதிக்கிறார் விஷால். அதோடு, கோ ஆர்ட்டிஸ்டின் தேவைகளை உணர்ந்து கொண்டு நடிக்கிறார். அதனால் அவருடன் ஒரு படத்தில் நடித்தால் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்படுகிறது என்று கூறுகிறார் ஹன்சிகா.