'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |
மர்ம அடிகள் பல நிறைந்த வர்மக்கலை தெரியும். கோடம்பாக்கத்தில் வர்மம் எனும் பெயரிலேயே ஒரு திரைப்படம் உருவாகி வருவது தெரியுமா?! கிரசன்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஹனிபா மாஸ்டர், எஸ்.அருணாசலகுமார் இணைந்து தயாரிக்கும் வர்மம் படத்தின் கதைப்படி, பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் நபர்களை கண்டுபிடித்து ஒரு பெண்ணே அதுமாதிரி நபர்களை தீர்த்துக் கட்டுகிறார். அவள்தான் இப்பட கதையின் நாயகி. இந்த கொலைகளை அவள்தான் செய்கிறாள் என்பது தெரியாமல், கதாநாயகன், நாயகியை தீவிரமாக காதலிக்கிறான். ஒரு கட்டத்தில் தன் காதலிதான் கொடூர கொலைகாரி என தெரிந்ததும் நாயகரின் முடிவு என்ன? நாயகியின் முடிவு என்ன? என்பது உள்ளிட்ட பல சஸ்பென்ஸ்களுடன் உருவாகி இருக்கும் வர்மம் படத்தின் அகிலன் நாயகனாகவும், அனகா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நிழல்கள் ரவி, பாலாசிங், மீரா கிருஷ்ணன், புரோட்டா சூரி, புவனா உள்பட பிரபல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.
ஏ.எஸ்.லாரன்ஸ் மாதவன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் வர்மம் படத்திற்கு பால்கிரகோரி ஒளிப்பதிவு செய்ய, மீரா லால் இசையமைத்திருக்கிறார். சமீபமாக ஆடியோ வெளியீடு கண்டிருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.




