கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
மர்ம அடிகள் பல நிறைந்த வர்மக்கலை தெரியும். கோடம்பாக்கத்தில் வர்மம் எனும் பெயரிலேயே ஒரு திரைப்படம் உருவாகி வருவது தெரியுமா?! கிரசன்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஹனிபா மாஸ்டர், எஸ்.அருணாசலகுமார் இணைந்து தயாரிக்கும் வர்மம் படத்தின் கதைப்படி, பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் நபர்களை கண்டுபிடித்து ஒரு பெண்ணே அதுமாதிரி நபர்களை தீர்த்துக் கட்டுகிறார். அவள்தான் இப்பட கதையின் நாயகி. இந்த கொலைகளை அவள்தான் செய்கிறாள் என்பது தெரியாமல், கதாநாயகன், நாயகியை தீவிரமாக காதலிக்கிறான். ஒரு கட்டத்தில் தன் காதலிதான் கொடூர கொலைகாரி என தெரிந்ததும் நாயகரின் முடிவு என்ன? நாயகியின் முடிவு என்ன? என்பது உள்ளிட்ட பல சஸ்பென்ஸ்களுடன் உருவாகி இருக்கும் வர்மம் படத்தின் அகிலன் நாயகனாகவும், அனகா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நிழல்கள் ரவி, பாலாசிங், மீரா கிருஷ்ணன், புரோட்டா சூரி, புவனா உள்பட பிரபல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.
ஏ.எஸ்.லாரன்ஸ் மாதவன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் வர்மம் படத்திற்கு பால்கிரகோரி ஒளிப்பதிவு செய்ய, மீரா லால் இசையமைத்திருக்கிறார். சமீபமாக ஆடியோ வெளியீடு கண்டிருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.