மொழி சர்ச்சை... கர்நாடகாவில் வலுக்கும் எதிர்ப்பு : மன்னிப்பு கேட்க முடியாது என கமல் திட்டவட்டம் | 7 ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ரிலீஸ் | விஜய் தேவரகொண்டா படத்தால் சூர்யா படத்தை கைவிட்ட கீர்த்தி சுரேஷ் | கூலி படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2விலும் நாகார்ஜூனா? | ''நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்'': எதை சொல்கிறார் மணிரத்னம்? | இட்லி கடை ரிலீஸ் தேதியில் சூர்யா 45 | தியேட்டரில் வெளியாகும் 'பறந்து போ' | என்னை பற்றிய பதிவுகளை நீக்க வேண்டும்: ஆர்த்திக்கு, ரவி மோகன் நோட்டீஸ் | மீண்டும் இணையும் வடிவேலு - பார்த்திபன் | பிளாஷ்பேக்: பூமியில் வாழ்ந்த கடவுள் 'என்.டி.ஆர்' |
மர்ம அடிகள் பல நிறைந்த வர்மக்கலை தெரியும். கோடம்பாக்கத்தில் வர்மம் எனும் பெயரிலேயே ஒரு திரைப்படம் உருவாகி வருவது தெரியுமா?! கிரசன்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஹனிபா மாஸ்டர், எஸ்.அருணாசலகுமார் இணைந்து தயாரிக்கும் வர்மம் படத்தின் கதைப்படி, பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் நபர்களை கண்டுபிடித்து ஒரு பெண்ணே அதுமாதிரி நபர்களை தீர்த்துக் கட்டுகிறார். அவள்தான் இப்பட கதையின் நாயகி. இந்த கொலைகளை அவள்தான் செய்கிறாள் என்பது தெரியாமல், கதாநாயகன், நாயகியை தீவிரமாக காதலிக்கிறான். ஒரு கட்டத்தில் தன் காதலிதான் கொடூர கொலைகாரி என தெரிந்ததும் நாயகரின் முடிவு என்ன? நாயகியின் முடிவு என்ன? என்பது உள்ளிட்ட பல சஸ்பென்ஸ்களுடன் உருவாகி இருக்கும் வர்மம் படத்தின் அகிலன் நாயகனாகவும், அனகா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நிழல்கள் ரவி, பாலாசிங், மீரா கிருஷ்ணன், புரோட்டா சூரி, புவனா உள்பட பிரபல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.
ஏ.எஸ்.லாரன்ஸ் மாதவன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் வர்மம் படத்திற்கு பால்கிரகோரி ஒளிப்பதிவு செய்ய, மீரா லால் இசையமைத்திருக்கிறார். சமீபமாக ஆடியோ வெளியீடு கண்டிருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.