சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
தீக்குச்சி, பேராண்மை, மாப்பிள்ளை, மீகாமன் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் எஸ்.ஆர்.சதீஷ்குமார். மீகாமன் படத்தின் ஒளிப்பதிவு ஓவியங்களை அடிப்படையாக வைத்து செய்யப்பட்டது என்கிறார். மேலும் அவர் கூறியதாவது: மீகாமன் அண்டர்வேல்ட் தாதாக்களின் கதை என்பதால் அதற்கு ஒளிப்பதிவில் பெரிய முக்கியத்தும் இருந்தது. படத்தின் காட்சிகள் பாதி இருட்டில்தான் நடக்கும். ஆனாலும் அது ரசிகர்களுக்கு உறுத்தக்கூடாது என்பது சவாலான விஷயம். இதற்காக புகழ்பெற்ற ஓவியர்கள் சிலரின் ஓவியங்களில் கையாளப்பட்டிருக்கும் லைட்டிங்கை வைத்து ஒளிப்பதிவு செய்தேன்.
ஒளிப்பதிவுக்கு சவாலாக இருக்கும் படங்களை தேர்வு செய்து பணியாற்றுகிறேன். அதனால்தான் வருடத்திற்கு ஒரு படத்தில் பணியாற்ற முடிகிறது. இடைவெளி ஏற்படுகிறது. எத்தனை படத்தில் பணியாற்றினோம் என்பது முக்கியமல்ல. எப்படி பணியாற்றினோம் என்பதே முக்கியம். என்கிறர் சதீஷ்குமார்.