Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளையராஜாவின் இசையில் பாடிய ஜீவா!

30 டிச, 2014 - 09:57 IST
எழுத்தின் அளவு:

என்றென்றும் புன்னகை படத்தில் நடித்து வந்தபோது, இந்த படமும் ஓடவில்லையென்றால், நான் ஹோட்டல் பிஸ்னஸில் இறங்கி விடுவேன் என்று கூறிவந்தார் ஜீவா. ஆனால், அந்தபடம் ஓரளவு ஓடியதையடுத்து தனது முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் நடிக்கத் தொடங்கினார். அதையடுத்து ரவி.கே.சந்திரன் இயக்கத்தில் யான் படத்தில் நடித்தார்.


அந்த படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்த ஜீவா, இந்த படம் எனது சினிமா கேரியரையே மாற்றப்போகிறது என்று பில்டப் கொடுத்து வந்தார். ஆனால், படம் சுத்தமாக ஓடவில்லை. அதையடுத்து அவருக்கு புதிய படங்களும் கிடைக்கவில்லை. அதனால் சென்னையில் தனது மனைவி நடத்தி வரும் ஹோட்டலில் இப்போது தனது கவனத்தை திருப்பியிருக்கிறார் ஜீவா.


இருப்பினும், அவரது தந்தையான ஆர்.பி.செளத்ரியே அடுத்து ஜீவாவை வைதது ஒரு படம் தயாரிக்க கதை கேட்டு வருகிறார். இந்த நிலையில், தற்போது விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கி வரும் டூரிங் டாக்கீஸ் என்ற படத்துக்காக இரண்டு பாடல்கள் பின்னணி பாடியுள்ளார் ஜீவா. படமே இல்லாமல் இருக்கும் தன்னைற இளையராஜாவின் இசையில் பாட வைத்திருப்பது ஜீவாவுக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாம். சினிமாவில் தான் முதன்முதலாக பாடியிருப்பதால் தனது நட்பு வட்டாரங்களுக்கும் தெரிவித்து கொண்டாடி வருகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)