புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
மழலை கலந்த அழகு ததும்பும் முகத்துடன் கோலிவுட்டில் வலம் வரும் சரண்யா மோகன் நடிக்கும் புதிய படம், அழகர் சாமியின் குதிரை. டைரக்டர் சுசீந்திரன் இயக்கும் இப்படத்தில் சரண்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கெளதம் வாசுதேவ் மேனனின் சொந்த நிறுவனமான போட்டான் பிலிம் ஃபேக்டரி இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இளைஞானி இளையராஜா இசையமைக்கிறார் என்பது மற்றுமொரு தனிச்சிறப்பாகும். பல்வேறு கதாபாத்திரங்களில் நேர்த்தியான நடிப்பின் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்த சரண்யா, தற்போது வேலாயுதம் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து வருகிறார். இது குறித்து சரண்யாவிடம் கேட்ட போது, டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வெண்ணிலா கபடிக் குழு படத்தில் என்னை கதாநாயகியாக்கிய சுசீந்திரன் தற்போது அழகர்சாமியின் குதிரை படத்தில் என்னை தேர்வு செய்திருக்கிறார். இந்த படத்தை கெளதம் மேனன் தயாரிப்பதால் எனது சந்தோஷம் இரு மடங்காகி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஒருநாள் ஒரு கனவு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சரண்யா, தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார்.