நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து | ‛குட் பேட் அக்லி' : இளமை தோற்றத்திற்கு திரும்பும் அஜித் |
மலையாளத்தில் செகண்ட் ஷோ, உஸ்தாத் ஹோட்டல், தீவம் என பல படங்களில் நடித்தவர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான். அரை டஜன் படங்களில் நடித்து அங்கு தனக்கென ஒரு வியாபார வட்டத்தை ஏற்படுத்திய பிறகு தமிழ் சினிமாவிலும கால்பதித்தால் இன்னும் தனது வியாபாரம் பெரிதாகி விடும் என்றுதான் பாலாஜி மோகன் இயக்கிய ''வாயை மூடி பேசவும்'' படத்தில் நடித்தார்.
ஆனால் அந்த படம் தோல்வியடைந்து விட்டது. அதனால் அதையடுத்து தமிழில் நடிக்க அவர் எடுத்த முயற்சிகள் கைகொடுக்கவில்லை. இநத நிலையில், கடல் படத்துக்குப் பிறகு தனது புதிய படத்தில் நடிக்க துல்கர் சல்மானுக்கு அழைப்பு விடுத்தார் மணிரத்னம். இது தனது கேரியரில் மிகப்பெரிய வாய்ப்பு என்பதால், உடனடியாக அப்படத்தில் கமிட்டாகி தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார் துல்கர் சல்மான்.
இந்த நிலையில், மணிரத்னம் படத்துக்குப்பிறகு அவரது மார்க்கெட் தமிழிலும் எகிறி விடும் என்று நினைத்த சில தமிழ்ப்பட இயக்குனர்கள் தங்களது புதிய படத்தில் நடிப்பதற்கு துல்கர் சல்மானிடம் கதை சொல்ல முன்வந்தபோது, இப்போதைக்கு புதிய கதை கேட்கும் ஐடியா இல்லை என்று கூறிவிட்டாராம். காரணம், மணிரத்னத்தின் ஓகே கண்மணி படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் தயாராகிறது. இந்த படத்தின் ரிசல்ட் நன்றாக இருக்கும்பட்சத்தில் இனி இன்னும மாறுபட்ட கதைகளில்தான் நடிப்பேன். அதனால் அப்படம் திரைக்கு வரும்வரை வெயிட் பண்ணுங்கள் என்று கதை சொல்ல முற்பட்டவர்களை நிலுவையில் வைத்துள்ளார் துல்கர்சல்மான்.