சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
1967ல் துணைவன் என்ற படத்தில் முருகன் கதாபாத்திரத்தில் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஸ்ரீதேவி. அப்போது அவருக்கு வயது நான்கு. அதையடுத்து தென்னிந்திய மொழிப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக பரவலாக நடித்தார். அதன்பிறகு அவரை, மூன்று முடிச்சு படத்தில் கே.பாலசந்தர் கதாநாயகியாக நடிகக வைத்தார்.
இப்படி தனது கேரியரை தொடங்கிய ஸ்ரீதேவி, தென்னிந்திய படங்களில் நம்பர்-ஒன் நடிகையாக திகழ்ந்தவர். பின்னர் பாலிவுட்டிலும புகழ் கொடியேற்றினார். திருமணத்திற்கு பிறகு, நீண்ட இடைவெளியையடுத்து, இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் நடித்த ஸ்ரீதேவி, 28 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் நடிக்கும் மாரீசன் படம் மூலம் நேரடியாக தமிழில் நடிக்க வ்ந்துள்ளார்.
இந்த படத்தில் ஒரு ராஜ்ஜியத்தை ஆளும் ராணியாக நடிக்கும் ஸ்ரீதேவி, தற்போது அப்படத்துக்காக உருவாக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட அரண்மனை செட்டில், தனது மகளாக நடிக்கும் ஹன்சிகாவுக்கு சரிசமமாக ஒரு பாடல் காட்சியில் நடனமாடிக்கொண்டிருக்கிறார். அதோடு, இடைவேளை நேரங்களில் தனது கடந்தகால மலரும்நினைவுகளிலும் மூழ்கிப்போகிறாராம் அவர்.