புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
அரவான் படத்திற்கு பிறகு வசந்தபாலன் இயக்கியுள்ள படம் காவியத் தலைவன். இது நாடக கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டது. வருகிற நவம்பர் 14ந் தேதி ரிலீசாகிறது. படத்தை விளம்பரப்படுத்த பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறார்கள். அதில் ஒன்று ரோட் ஷோ நடத்துவது. படத்தின் கதையில் நாடக கலைஞர்கள் தங்கள் நாடகத்தை விளம்பரப்படுத்த நாடகத்தில் போடும் வேஷங்களை கட்டி வாகனத்தில் ஊர் ஊராக செல்வார்கள்.
அதே பாணியில் பட ரிலீசின் போது சித்தார்த், பிருத்விராஜ், அனைகா, வேதிகா உள்ளிட்ட நடிகர் நடிகைகள் ஊர் ஊராக சென்று ரோட் ஷோ நடத்த இருக்கிறார்கள். இதுதவிர அந்தந்த ஊரில் உள்ள இளைஞர்களை நடிக்க வைத்து அவர்களில் நன்றாக நடிப்பவர்களுக்கு பரிசும் வழங்க இருக்கிறார்கள்.
இந்த தகவலை இயக்குனர் வசந்தபாலன் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: சங்கராபரணம், சலங்கை ஒலி, சிந்து பைரவி, சிப்பிக்குள் முத்து போன்று இது ஒரு இசைப் படம். சங்கரதாஸ் சுவாமிகள், கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களோடு கற்பனை கதையும் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.