சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
அஜீத் தற்போது கவுதம்மேனன் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கு அடுத்த படமாக வீரம் படத்தை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதற்காக கதை உள்ளிட்ட அத்தனை விஷயங்களுடனும் சிவா காத்திருக்கிறார். இதற்கிடையில் அஜீத்துடன் ஹன்சிகா நடிப்பதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் அதனை சிவா மறுக்கிறார். "படத்தின் பேப்பர் வேலைகள் முடிந்திருக்கிறது. லொக்கேஷன் பார்த்து வந்திருக்கிறேன். மற்ற எந்த விஷங்களும் இன்னும் முடிவாகவில்லை. டெக்னீஷியன்கள், ஆர்ட்டிஸ்டுகளும் முடிவாக வில்லை. ஹன்சிகா நடிப்பதாக வந்த தகவல்கள் உண்மையானதல்ல. ஹீரோயின் நான்கைந்து பேர் சாய்சில் இருக்கிறார்கள். யார் என்பதை முடிவு செய்யவில்லை" என்கிறார் சிவா.