சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியின் மகனான துல்கர்சல்மான், ''தமிழில் வாயை மூடி பேசவும்'' என்ற படத்தில் அறிமுகமானார். அந்த படம் தோல்வியடைந்து விட்டபோதும இப்போது மணிரத்னம் இயக்கி வரும் ஓகே கண்மணி(அதிகாரப்பூர்வ தலைப்பு அல்ல) படத்தில் நடிக்கிறார். அதையடுத்து, இன்னொரு மலையாள நடிகரான ஜெயராமின் மகன் காளிதாஸ், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் அடுத்து இயக்கும் ஒரு பக்க கதை என்ற படத்தில் அறிமுகமாகிறார்.
இப்படி இளவட்ட மலையாள நடிகர்களெல்லாம் தமிழ்ப்படங்களில் நடிப்பதால், மலையாள டைரக்டர் பாசிலின் மகனும், நஸ்ரியாவின் கணவருமான பஹத் பாசிலுக்கும் இப்போது தமிழ்ப் படங்களில் நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாம். அதனால் அவரது மனைவியான நஸ்ரியா தனக்கு தெரிந்த சில தமிழ் டைரக்டர்களை சந்தித்து கணவருக்காக படவேட்டையும் தொடர்ந்திருக்கிறாராம்.
அதோடு, படத்தில் பஹத் ஹீரோவாகத்தான் நடிப்பார் என்ற எந்த சட்டமும் இல்லை. இரண்டு மூன்று ஹீரோ கதைகள் என்றாலும் நடிப்பார். ஆனால் விஜய் சேதுபதி நடித்து வருவது போன்று கொஞ்சம் நேரம் வந்தாலும் மனதில் நிற்கிற மாதிரி வேடமாக கொடுங்கள் என்று தனது நிலையை விளக்குகிறாராம் நஸ்ரியா. அதனால் மோகன்லால், மம்மூட்டி, ப்ருதிவிராஜ், துல்கர்சல்மான, காளிதாசைத் தொடர்ந்து பஹத்பாசிலும் விரைவில் தமிழ் படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.