என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு |
மறைந்த பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார். வில்லன் கேரக்டர்களில் நடித்து புகழ்பெற்றாலும் மிகச் சிறந்த ஆன்மீகவாதி, பக்திமான், வாழ்க்கையில் சீரிய நெறிமுறைகளை கடைப்பிடித்தவர். அவர் பல ஆண்டுகளாக ராசியான வைர மோதிரம் ஒன்றை அணிந்து வந்தார். எந்த சூழ்நிலையிலும் அதை அவர் கழற்றுவதே இல்லை. அவரது மரணத்திற்கு பிறகு அந்த மோதிரத்தை அவரது குடும்பத்தினர் பாதுகாத்து வந்தனர். இப்போது அந்த மோதிரம் உள்பட நம்பியார் வீட்டில் இருந்த 5 ஜோடி வைர கம்மல்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு அறிந்த யாரோ அதனை திட்டமிட்டு கொள்ளையடித்துள்ளனர்.
கோபாலபுரம் பங்களா
நடிகர் நம்பியார் தனது கடைசிகாலம் வரை தனது கோபாலபுரம் பங்களாவில் வசித்து வந்தார். அதன் பிறகு அவரது மகன் சுகுமாறன் நம்பியார் அந்த பங்களாவில் வசித்தார். அவரது மறைவுக்கு பிறகு அந்த பங்களா இடிக்கப்பட்டு அங்கு பல அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. அதற்கு அருகில் நம்பியாருக்கு சொந்தமான கெஸ்ட் அவுசில் அவரது மகள் வசித்து வருகிறார். அங்குதான் இந்த கொள்ளை நடந்துள்ளது.
வேலைக்காரி மீது சந்தேகம்
அந்த வீட்டில் பல ஆண்டுகள் வேலைபார்த்து வந்த வேலைக்காரி கடந்த 10 நாட்களுக்கு முன் வேலையை விட்டு நின்று விட்டார். அவருக்கு வைர நகைகள் பற்றித் தெரியும், அவரோ, அவர் தகவல் கொடுத்தோ நகைகள் திருட்டு போயிருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
புகார் இல்லை. நகைகள் திருட்டு போனதாக போலீசுக்கு தகவல் வந்தாலும் எழுத்துபூர்வமான புகார் எதையும் யாரும் கொடுக்கவில்லை. என்றாலும் ராயப்பேட்டை குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.