Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குடிகாரர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்! - த்ரிஷா முழக்கம்

05 அக், 2014 - 08:52 IST
எழுத்தின் அளவு:

இதுவரை நாய் உள்ளிட்ட வாயில்லா ஜீவன்களை துன்புறுத்தாதீர்கள் என்று குரல் கொடுத்து வந்த த்ரிஷா, தற்போது குடித்து விட்டு வாகனங்களை ஓட்டாதீர்கள் என்றும் குரல் கொடுத்து வருகிறார்.

இதுபற்றி அவர் விடுத்துள்ள செய்தியில், குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுவதால் சாலைகளில் விபத்து ஏற்படுவதோடு, நடந்து செல்லும் அப்பாவி மக்களும் விபத்துக்கு ஆளாகிறார்கள். என்னைப் பொறுத்தவரை குடித்து விட்டு எனது டிரைவரே வாகனம் ஓட்டினாலும் அவரை நான் போலீசில் ஒப்படைப்பேன்.


மேலும், நான் குடிப்பவர்களுக்கு எதிரி அல்ல. குடிக்க வேண்டும் என்றால், வீட்டிற்கு சென்று குடித்து விட்டு தூங்கிவிடலாம். அதை விடுத்து பணியில் இருக்கும்போது குடிப்பதால்தான் விபத்துக்கள் நேரிடுகிறது என்று கூறியுள்ள த்ரிஷா, ஐதராபாத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோர் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதேபோல் தமிழ்நாட்டிலும் கடுமையான நடவடிக்கை எடுத்தால் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)