மீண்டும் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் | கடலை சுத்தம் செய்ய கிளம்பிய ரெஜினா | யுனிசெப் தூதராக கரீனா கபூர் நியமனம் | பிளாஷ்பேக்: 'கண்ணீர் திலகம்' ஸ்ரீரஞ்சனி | டைட்டானிக் கேப்டன் காலமானார் | ஐஸ்வர்யா லட்சுமி தோழிதான், காதலி இல்லை : அர்ஜூன் தாஸ் விளக்கம் | புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! |
பேராண்மை படத்திற்கு பிறகு எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் படம் புறம்போக்கு. இதில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. சென்னை பின்னி மில்லில் பிரம்மாண்ட ஜெயில் ஷெட் போடப்பட்டு அதில் கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புறம்போக்கு என்ற படத்தின் டைட்டிலில் திருத்தம் செய்துள்ளார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். புறம்போக்கு என்ற டைட்டிலுடன் பொதுவுடமை என்ற வார்த்தையை சேர்த்து "புறம்போக்கு என்கிற பொதுவுடமை" என்று மாற்றி உள்ளார்.
இந்த மாற்றம் குறித்து இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் அளித்துள்ள விளக்கம் வருமாறு: நம் நாட்டில் புறம்போக்கு என்று எதுவும் இல்லை. எல்லாமே பொது நிலம், மக்கள் நிலம். நாம்தான் அதனை நம் வசதிக்கேற்ப விளைச்சல் பொறம்போக்கு, பாசன பொறம்போக்கு, மேய்ச்சல் புறம்போக்கு என்று பிரித்து வைத்திருக்கிறோம். எனவே பொறம்போக்கு என்பது ஊருக்கு பொதுவான இடம் என்று அர்த்தம். அதனால்தான் டைட்டிலை புறம்போக்கு என்கிற பொதுவுடமை என்று வைத்திருக்கிறேன் என்கிறார் ஜனநாதன்.