Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஐ படத்தில் நடிக்க மறுத்த ரஜினி!

17 செப், 2014 - 08:28 IST
எழுத்தின் அளவு:

ஐ படத்தில் வடசென்னை வாலிபர், மிஸ்டர் மெட்ராஸ், மாடல் என மூன்று கெட்டப்பில் நடித்திருக்கிறார் விக்ரம். அந்தவகையில், ஒரு மாடலின் வாழ்க்கையை மையப்படுத்தி ஐ கதை உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசரைப் பார்த்த ரஜினி உள்பட அனைவருமே வியந்து அவரை பாராட்டியுள்ளனர். இதில் ரஜினி, நடிப்புக்காக தனது உடம்பை இந்த அளவுக்கு வருத்திக்கொள்ளும் ஒரு நடிகரை நான் இந்த உலகத்திலேயே பார்த்ததில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த மாடல் கதையை ரஜினியிடம் எந்திரன் கதையை சொல்வதற்கு முன்பே ஷங்கர் சொன்னாராம். மாடலாக வர வேண்டும் என்று நினைக்கும் ஒருவன், முன்னணி மாடலாக வருவது போன்று சித்தரிக்கப்பட்ட அந்த கதையை கேட்ட ரஜினி, கதை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நானெலலாம் மாடலாக நடித்தால் சரி வராது என்று சொல்லி அப்போது நடிக்க மறுத்து விட்டாராம்.


அதன் பிறகு தான் எந்திரன் கதையை சொன்னாராம் ஷங்கர். இதை ஐ பட விழாவின்போது சொன்ன ரஜினி, இப்போது விக்ரம் இந்த படத்தில் நடித்திருந்தாலும், முன்பே ஷங்கர் என்னிடம் அந்த கதையை சொன்னபோது நான் ஓ.கே சொல்லியிருந்தால் நான்தான் இந்த கதையில் நடித்திருப்பேன். ஆக, 5 வருடத்திற்கு முன்பே இந்த கதையை ஷங்கர் ரெடி பண்ணி விட்டார் என்றார் ரஜினி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)