புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
இயக்குனர் கவுதம் மேனன் தயாரிக்கும் படம், 'தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்', தங்க மீன்கள் படத்திற்கு பிறகு அவர் தயாரித்த படம். முன்னாள் சின்னத்திரை நடிகர் பிரேம் சாய் இயக்கினார். ஜெய், யாமி கவுதம் நடித்தார்கள். யாமி கவுதம் இப்போது இந்தியில் பிசியான நடிகையாகிவிட்டார். இயக்குனர் கவுதம் மேனனுக்கு ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்னைகளால் தேங்கி நின்ற இந்தப் படம் இப்போது புத்துயிர் பெற்றிருக்கிறது. படத்தின் பணிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.
இதுபற்றி இயக்குனர் பிரேம் சாய் கூறியதாவது: இது தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் தயாராகிறது. தெலுங்கில் கொரியர் பாய் கல்யாண் என்று பெயர், தமிழில் கொரியர் என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை கிடைக்காமல் பலவித ஆராய்ச்சிகளை செய்து கடைசியில் தனியார் அஞ்சல் என்று கண்டுபிடித்தோம்.
படத்தின் முதல் பாதி காதல், காமெடியாக செல்லும், அடுத்த பாதி திரில்லர், ஆக்ஷன், சேசிங்குன்னு போகும், இது எல்லாத்துலேயும் சமூக பார்வையுள்ள ஒரு மேசேஜ் இருக்கும். வேலைக்கு போயி சம்பாதிச்சு, பிடிச்சவளை காதலிச்சு ஜாலிய இருக்கிற பையன்கிட்ட அவனுக்கு துளியும் சம்பந்தமில்லாத பிரச்சினை ஒண்ணு வந்து சேருது. சின்ன பிரச்சினைதானே சமாளிச்சிடலாமுன்னு உள்ளே போவான். அப்புறம்தான் அட இதுக்குள்ள இவ்ளோ இருக்கான்னு, அவனும் நாமும் ஆச்சர்யபடுமாதிரியான திரைக்கதை. பணிகள் வேகமாக நடந்துகிட்டிருக்கு. விரைவில் வெளிவரும் என்கிறர் பிரேம்சாய்.