சம்மர் ஜாக்பாட் ஆக 21 நாள் இடைவெளியில் அடுத்தடுத்து வெளியாகும் மோகன்லாலின் படங்கள் | வருண் தவானுக்கு மும்பை மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை | 50 கிமீ நடந்தே படப்பிடிப்புக்கு வந்த தர்மேந்திரா ; ஷோலே இயக்குனர் புதிய தகவல் | மோகன் பாபுவுக்கு கவர்னரின் சிறப்பு விருது கொடுத்து கவுரவித்த மேற்கு வங்க அரசு | மார்ச்சில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த நானி படத்தின் அதிர்ச்சி தரும் அப்டேட் | வருங்கால சினிமா இப்படிதான்: சீனாவில் வந்த மாற்றம் | ஓடிடியில் வந்த பிறகு இன்னும் பாராட்டு பெறும் 'சிறை' மற்றும் விக்ரம் பிரபு | இனி பாட மாட்டேன் : பிரபல பாடகர் அரிஜித் சிங் திடீர் அறிவிப்பு | ரீல்ஸ்களில் சாதனை படைத்த 'அல்லு அர்ஜுன் 23' | 'வா வாத்தியார்' இரண்டே வாரங்களில் ஓடிடி ரிலீஸ், ஏன் ? |
ராதாபாரதி இயக்கி வரும் படம் நண்பர்கள் நற்பணி மன்றம். ஜெய்நாத், அக்ஷயா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஸ்ரீகாந்த தேவா இசை அமைக்கிறார். குத்துப்பாட்டு ஸ்பெஷலிஸ்ட்டான ஸ்ரீகாந்த் தேவா, ஒரு குத்துப்பாட்டுக்கு மெட்டுப்போட்டு அதில் ஆடவும் செய்திருக்கிறார்.
இதுகுறித்து ராதாபாரதி கூறியதாவது: இது காமெடி கலந்த காதல் படம். திருக்கோடியூர் கிராமத்தில் ஒரு குத்துப்பாட்டை படமாக்கினோம். கோவில் திருவிழாவில் இளைஞர்கள் ஆடிப்பாடுவது மாதிரியான பாட்டு. "கட்டழகி சின்ன பொட்டழகி உன்னை பார்த்தலே பலம் கூடுமடி..." என்ற இந்த பாடலுக்கு ஸ்ரீகாந்த் தேவா ஆடினார் அவருடன் நாயகன் ஜெய்நாத், வைபவி என்ற டான்சரும் ஆடியிருக்கிறார்கள். இந்த பாட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்" என்றார் ராதாபாரதி.




