மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |
ராதாபாரதி இயக்கி வரும் படம் நண்பர்கள் நற்பணி மன்றம். ஜெய்நாத், அக்ஷயா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஸ்ரீகாந்த தேவா இசை அமைக்கிறார். குத்துப்பாட்டு ஸ்பெஷலிஸ்ட்டான ஸ்ரீகாந்த் தேவா, ஒரு குத்துப்பாட்டுக்கு மெட்டுப்போட்டு அதில் ஆடவும் செய்திருக்கிறார்.
இதுகுறித்து ராதாபாரதி கூறியதாவது: இது காமெடி கலந்த காதல் படம். திருக்கோடியூர் கிராமத்தில் ஒரு குத்துப்பாட்டை படமாக்கினோம். கோவில் திருவிழாவில் இளைஞர்கள் ஆடிப்பாடுவது மாதிரியான பாட்டு. "கட்டழகி சின்ன பொட்டழகி உன்னை பார்த்தலே பலம் கூடுமடி..." என்ற இந்த பாடலுக்கு ஸ்ரீகாந்த் தேவா ஆடினார் அவருடன் நாயகன் ஜெய்நாத், வைபவி என்ற டான்சரும் ஆடியிருக்கிறார்கள். இந்த பாட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்" என்றார் ராதாபாரதி.




