புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
கோவையில், தனது ரசிகர்கள் பலரது திருமணத்தை ஒரே மேடையில் நடத்தி வைத்தார் நடிகர் விஜய். நடிகர் விஜய், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், கத்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஒரு பக்கம் பிரச்னை கிளம்பியுள்ள போதிலும், நடிகர் விஜய் எப்போதும் போல் படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே தனது ரசிகர்கள் இடத்தில் அதீத அன்பு கொண்ட விஜய், அவர்களை அடிக்கடி சந்தித்து வருவார். பல ஊர்களில் அவரது ரசிகர் மன்றம் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளிலும் கலந்து கொள்வார்.
இந்நிலையில், கோவையில், விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில், ரசிகர்கள் பலரது திருமணம் இன்று ஒரே இடத்தில் நடந்தது. இளைஞர் அணி நடத்திய இந்த திருமண நிகழ்ச்சியில், விஜய் கலந்து கொண்டார். மணமக்களுக்கு தன் கையால் தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தினார். ரசிகர்களின் திருமணத்தையொட்டி நடிகர் விஜய் பட்டு வேஷ்டி, பட்டு சட்டை அணிந்து வந்திருந்தார்.