ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது | எனக்கு தடை விதிப்பவர்களிடம் ஏன் என்று கேளுங்கள்: ராஷ்மிகா | அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பூமி பட்னேகர் | பிளாஷ்பேக் : அமிதாப்பச்சன் பட ரீமேக்கில் ஆர்வம் காட்டிய ரஜினி | பழம்பெரும் பாடகி, நடிகை பாலசரஸ்வதி தேவி காலமானார் | நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? |
ஏறத்தாழ 700 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் காமெடி நடிகர் குண்டு கல்யாணம் இயக்குனர் அவதாரம் எடுத்திருப்பது ஏற்கனவே தெரிந்த சங்கதிதான். எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியான குண்டுகல்யாணம் இயக்கும் படத்தின் தலைப்பு நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி. குழந்தைகளை குஷி படுத்தும் நோக்கில் உருவாக்கப்படும் இப்படத்தில் குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சிக்கு தேவையான நல்ல கருத்துக்களும் அடங்கியிருக்கிறதாம். காட்டுக்குள் சுற்றுலா போகும் குழந்தைகள் அங்கே சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவிக்கிறார்கள். எப்படி வெளியே வந்தார்கள் என்பதுதான் விறுவிறுப்பான நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி படத்தின் கதை. படத்தில் குண்டுகல்யாணத்தின் மகள் ஜனனி முக்கிய கேரக்டரில் நடிப்பதுடன், அசிஸ்டெண்ட் டைரக்டராகவும் பணியாற்றுகிறார். சத்யமங்கலம், மேட்டூர் காடுகளில் பாதுகாப்பான ஏரியாவில்தான் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம். சூட்டிங் ஸ்பாட்டில் துருதுருவென படத்தில் நடிக்கப்போகும் வாண்டுகளுக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கும் குண்டுகல்யாணம், படத்தில் வன அதிகாரி கேரக்டரில் நடிக்கிறார். குண்டு கல்யாணம் இயக்கும் இன்னொரு படமான நாங்க புதுசா படத்தின் மியூசிக் கம்போசிங் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பது கூடுதல் தகவல்.