Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வேதிகாவை முணுமுணுக்க வைத்த ஏ.ஆர்.ரகுமான்!

20 ஆக, 2014 - 09:11 IST
எழுத்தின் அளவு:

முனி, சக்கரக்கட்டி படங்களில் நடித்தவர் வேதிகா. பாலாவின் பரதேசி படம் இவரது திறமைக்கு மேலும் உரம் போட்டது. அதைப் பார்த்து காவியத்தலைவன் படத்தில் நாடக நடிகை வேடத்திற்கு இவரை புக் பண்ணினார் வசந்தபாலன். இரண்டறை வருடங்களாக படப்பிடிப்பு நடந்து வந்த இந்த படத்தில் வேதிகாவுக்கு சவாலான வேடமாம்.

அதனால் இந்த படத்தில் நடித்து முடிக்கிற வரை வேறு எந்த படத்திலும் கமிட்டாகாமல் தான் நடித்ததாக சொல்லும் வேதிகா, இதுவரை நான் நடித்த படங்களை விட இந்த படத்தில் எனது பெஸ்ட்டை கொடுத்திருக்கிறேன் என்கிறார். இதன்பிறகு தன்னை எந்த மாதிரியான வெயிட்டான கதாபாத்திரங்களுக்கும் இயக்குனர்கள் அணுகுவார்கள் என்றும் நம்பிக்கையுடன் சொல்கிறார்.


மேலும், வேதிகா சிறு வயதில் இருந்தே ஏ.ஆர்.ரகுமானின் தீவிரமான ரசிகையாம். அவர் இசையமைத்த ரோஜா, பம்பாய் படங்களின் பாடல்களை விருமபி ரசித்துள்ளாராம். இந்தநிலையில், இப்போது அவர் இசையமைக்கிற ஒரு படத்தில் தான் கதாநாயகியாக நடிப்பது இன்னும் சந்தோசமாக உள்ளது என்று கூறும் வேதிகா, அந்த படத்தில் சித்தார்த்துடன் இணைந்து நான் பாடும் யாருமில்லா -என்று தொடங்கும் பாடல் எனது பேவரிட் சாங்காகி விட்டது. படப்பிடிபபு தளத்தில் எப்போதும் நான் அந்த பாடலைத்தான் முணுமுணுத்துக் கொண்டிருந்தேன் என்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)