சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
முனி, சக்கரக்கட்டி படங்களில் நடித்தவர் வேதிகா. பாலாவின் பரதேசி படம் இவரது திறமைக்கு மேலும் உரம் போட்டது. அதைப் பார்த்து காவியத்தலைவன் படத்தில் நாடக நடிகை வேடத்திற்கு இவரை புக் பண்ணினார் வசந்தபாலன். இரண்டறை வருடங்களாக படப்பிடிப்பு நடந்து வந்த இந்த படத்தில் வேதிகாவுக்கு சவாலான வேடமாம்.
அதனால் இந்த படத்தில் நடித்து முடிக்கிற வரை வேறு எந்த படத்திலும் கமிட்டாகாமல் தான் நடித்ததாக சொல்லும் வேதிகா, இதுவரை நான் நடித்த படங்களை விட இந்த படத்தில் எனது பெஸ்ட்டை கொடுத்திருக்கிறேன் என்கிறார். இதன்பிறகு தன்னை எந்த மாதிரியான வெயிட்டான கதாபாத்திரங்களுக்கும் இயக்குனர்கள் அணுகுவார்கள் என்றும் நம்பிக்கையுடன் சொல்கிறார்.
மேலும், வேதிகா சிறு வயதில் இருந்தே ஏ.ஆர்.ரகுமானின் தீவிரமான ரசிகையாம். அவர் இசையமைத்த ரோஜா, பம்பாய் படங்களின் பாடல்களை விருமபி ரசித்துள்ளாராம். இந்தநிலையில், இப்போது அவர் இசையமைக்கிற ஒரு படத்தில் தான் கதாநாயகியாக நடிப்பது இன்னும் சந்தோசமாக உள்ளது என்று கூறும் வேதிகா, அந்த படத்தில் சித்தார்த்துடன் இணைந்து நான் பாடும் யாருமில்லா -என்று தொடங்கும் பாடல் எனது பேவரிட் சாங்காகி விட்டது. படப்பிடிபபு தளத்தில் எப்போதும் நான் அந்த பாடலைத்தான் முணுமுணுத்துக் கொண்டிருந்தேன் என்கிறார்.