Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராய் லட்சுமியை புலம்ப வைத்த இரும்புக்குதிரை!

12 ஆக, 2014 - 01:50 IST
எழுத்தின் அளவு:

அதர்வா-ப்ரியாஆனந்த் ஜோடி சேர்ந்துள்ள இரும்புக்குதிரை படத்தில் கதாநாயகி அல்லாத ஒரு கிளாமர் கேரக்டரில் நடித்துள்ளார் ராய் லட்சுமி. அதர்வாவை காதல் செய்யும் வேடத்தில் ப்ரியாஆனந்த் நடித்திருப்பதால், வில்லித்தனமான காட்சிகள் அனைத்தும் தனக்குத்தான். அதனால், கதையில் ஸ்கோர் பண்ணப்போவது நாம்தான் என்று ஆரம்பத்தில் இவர் மார்தட்டி வந்தார்.


ஆனால், படப்பிடிப்பு ஆரம்பித்தபோது படத்தில் வில்லனாக நடிக்கப்போகிறவர் ஏழாம் அறிவு வில்லன் ஜானி என்றதோடு, இந்தியாவின் முதல் பெண் பைக் ரேஸ் வீரரான அலிஷா அப்துல்லாவும் நடிக்கப்போகிற செய்தியை கேள்விப்பட்டு ஆடிப்போனார் ராய் லட்சுமி. படத்தில் ப்ரியாஆனந்துக்கு அப்புறம் எல்லாமே நாம்தான் என்று நினைத்து வந்த நேரத்தில் திடீரென்று ஜானி, அலிஷாவையும இறக்கி விட்டதால், அப்படியென்றால் இந்த படத்திலும் தனக்கு டம்மியான் ரோல்தான் என்ற முடிவுக்கு அப்போதே வந்து விட்டார்.


அந்த வகையில், ப்ரியாஆனந்த், ராய் லட்சுமி இருவருமே சும்மா தொட்டுக்கொள்ளும் ஊறுகாயாகத்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்களாம். குறிப்பாக, ராய் லட்சுமியை சில காட்சிகள் மற்றும் குத்துப்பாட்டுக்கே பயன்படுத்தியிருக்கிறார்கள். அதனால் பெரிய வேடம் என்று கமிட்டான ராய் லட்சுமி வழக்கம்போல் இந்த படத்திலும் மூன்றாவது நாயகி ரேஞ்சுக்கு என்னை தள்ளி விட்டார்களே என்று புலம்பிக்கொண்டு திரிகிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)