Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மலையாளத்துக்கு திரும்பி விட்டார் நரேன்

29 ஜூலை, 2014 - 01:49 IST
எழுத்தின் அளவு:

ஒளிப்பதிவாளராக இருந்து மலையாளத்தில் நடிகர் ஆனவர் நரேன். சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். பள்ளிக்கூடம், நெஞ்சிருக்கும் வரை, அஞ்சாதே, தம்பிக்கோட்டை படங்களில் நடித்தார். முகமூடி படத்தில் வில்லனாக நடித்தார். சித்திரம் பேசுதடி, அஞ்சாதே தவிர எதுவுமே அவருக்கு சரியாக அமையவில்லை. இங்கு வாய்ப்பில்லாதபோது மலையாளப் படத்தில் நடிப்பார்.


சமீபகாலமாக தமிழில் அவருக்கு பெரிய வாய்ப்பில்லை கத்துக்குட்டி என்ற ஒரே ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதனால் இப்போது மலையாளத்தில் தீவிர கவனம் செலுத்துகிறார். தி ஹிட் லிஸ்ட், கமத் அண்ட் கமத், 3 டாட்ஸ், ஆறு சுந்தரியோட கதா, ரெட் பெய்ன் ஆகியவை அவர் சமீபத்தில் நடித்த படங்கள். தற்போது சிபிமலை இயக்கும் நிங்களுடே வீட்டில் அதிதிகள் என்ற படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறார். ஜெயராம், பிரியாமணி கணவன் மனைவியாக நடிக்கும் இந்தப் படத்தில் நரேன் ஒரு மாடல் அழகராக நடிக்கிறார். அவர்கள் குடும்பத்தில் நுழைந்து குழப்பம் விளைவிக்கிற கதை. தொடர்ந்து நரேன் மலையாளப் படங்களில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)