சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
ஒளிப்பதிவாளராக இருந்து மலையாளத்தில் நடிகர் ஆனவர் நரேன். சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். பள்ளிக்கூடம், நெஞ்சிருக்கும் வரை, அஞ்சாதே, தம்பிக்கோட்டை படங்களில் நடித்தார். முகமூடி படத்தில் வில்லனாக நடித்தார். சித்திரம் பேசுதடி, அஞ்சாதே தவிர எதுவுமே அவருக்கு சரியாக அமையவில்லை. இங்கு வாய்ப்பில்லாதபோது மலையாளப் படத்தில் நடிப்பார்.
சமீபகாலமாக தமிழில் அவருக்கு பெரிய வாய்ப்பில்லை கத்துக்குட்டி என்ற ஒரே ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதனால் இப்போது மலையாளத்தில் தீவிர கவனம் செலுத்துகிறார். தி ஹிட் லிஸ்ட், கமத் அண்ட் கமத், 3 டாட்ஸ், ஆறு சுந்தரியோட கதா, ரெட் பெய்ன் ஆகியவை அவர் சமீபத்தில் நடித்த படங்கள். தற்போது சிபிமலை இயக்கும் நிங்களுடே வீட்டில் அதிதிகள் என்ற படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறார். ஜெயராம், பிரியாமணி கணவன் மனைவியாக நடிக்கும் இந்தப் படத்தில் நரேன் ஒரு மாடல் அழகராக நடிக்கிறார். அவர்கள் குடும்பத்தில் நுழைந்து குழப்பம் விளைவிக்கிற கதை. தொடர்ந்து நரேன் மலையாளப் படங்களில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார்.