சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
விமல் நாயகனாக நடித்து வெளியாகியுள்ள படம் நேற்று இன்று. இந்த படத்தில் வெளுத்துக்கட்டு அருந்ததி ஒரு ஆபாச கேரக்டரில் நடித்திருந்தார். கதைப்படி ஐபிஎஸ் அதிகாரியான அவர் விலைமாது போன்று நடித்து, காட்டுக்குள் சென்ற போலீஸ் அதிகாரிகளை உளவு பார்ப்பார். அப்போது அவர்கள் செய்து கூட்டுக்களவாணித்தனத்தையும் மேல்அதிகாரியிடம் காட்டிக்கொடுத்து தனது கேரக்டரை முழுமை செய்திருப்பார்.
ஆனால், இந்த கேரக்டரில் ஆரம்பத்திmf நடித்தபோதில் இருந்தே ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கினார் அருந்ததி. அப்படத்தின் டீசர் வெளியானபோது அவரது ஆபாச குளியலைப்பார்த்து அவரே மிரண்டு விட்டார். இந்த அளவுக்கு நான் நடிக்கவில்லை, எப்படியோ என்னை ஏமாற்றி படமாக்கி விட்டார்கள் என்று டைரக்டர் மீது புகார் கூறினார். தற்போது திரைக்கு வந்துள்ள அப்படத்தில் சென்சார் அதிகாரிகள் கைவரிசை காட்டியபோதும்கூட பல காட்சிகளில் ஆபாச நெடி தூக்கலாக உள்ளது.
இதுபற்றி அருந்ததியை கேட்டபோது, மற்றவர்களைப் பொறுவத்தவரை அது நான் நடித்தது ஆபாச வேடம் போல் தெரியலாம். அதேசமயம் கதையோடு ஒன்றிப்பார்க்கும்போது நான் ஏற்று நடித்த ஐபிஎஸ் வேடத்தை நிறைவாக செய்திருப்பதாகவே கருதுகிறேன். அந்த வகையில் நான் இதுவரை நடித்ததில் இந்த படத்தில் நடித்தது சிறப்பான வேடம்தான் என்கிறார் அருந்ததி.
அப்படியென்றால், தொடர்ந்து இதுபோன்ற வேடங்களில் நடிப்பீர்களா? என்று அவரைக்கேட்டால், சென்சார் அனுமதிக்கும் அளவுக்கு கிளாமராக நடிப்பதில் எனக்கும் ஒன்றும் ஆட்சேபனை இல்லை. மேலும், இதுவரை குடும்ப கதாபாத்திரங்களாக நடித்து வந்த நான் இனிமேல் இதுபோன்ற மாடர்ன் கெட்டப்பில் வேடங்களில நடித்து எனது மார்க்கெட்டில் பரபரப்பு கூட்டவே விரும்புகிறேன் என்கிறார் அருந்ததி