விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் |
'பொல்லாதவன்' படத்தில் நடித்த 'குத்து' ரம்யா, வாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு தமிழில் பட வாய்ப்பு இல்லாததால் தனது தாய்மொழியான கன்னட படங்களில் நடித்து வந்தார். அதோடு, தனது தாத்தா வழியில் தானும் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு கடந்த சட்டமன்ற தேர்தலில் சூறாவளி பிரசாரம் செய்தார்.
அதையடுத்து, கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதால், ரம்யாவின் பிரசாரமும் அந்த வெற்றிக்கு ஒரு காரணம் என்று கருதிய கட்சி மேலிடம் அவருக்கு முக்கிய பொறுப்பு கொடுத்தது. அதோடு, மாண்டியா இடைத்தேர்தலில் போட்டியிட வைத்தது. அதில் வெற்றி பெற்ற ரம்யா எம்.பி ஆனார். ஆனபோதும், சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
பின்னர், அந்த ஏரியாவிலேயே வீடு பிடித்து குடியிருந்த ரம்யா வீட்டை காலி பண்ணி விட்டு பெங்களூருக்கு விரைந்தார். அதைப்பார்த்த எதிர்கட்சியினர், தோல்வி அடைந்ததும் மக்களை மறந்து விட்டு ஓடி விட்டார் என்று ரம்யாவை கிண்டல் செய்தனர். இதனால் எதிர்கட்சிகளின் வாயை அடைக்கும் விதமாக தற்போது மீண்டும் மாண்டியா தொகுதியில் வாடகை வீடு பிடித்து குடியேறியிருக்கும் ரம்யா, தேர்தலில் வெற்றி பெற்றாலும், தோற்றாலும் எனது மக்கள் சேவை தொடரும் என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் ரம்யாவின் ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணித்து அவரைப்பற்றி ஏதாவது அவதூறு பரப்புவதை கர்நாடக எதிர்கட்சிகள் திட்டமிட்டு சதி செய்து வருகிறார்களாம்.