சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சமீபத்தில் வெளிவந்த படம் மஞ்சப்பை, விமல், லட்சுமிமேனன், ராஜ்கிரண் நடித்திருந்தனர். ராகவன் இயக்கி இருந்தார். இந்தப் படம் ஓரளவுக்கு பேமிலி ஆடியன்சுக்கு விருப்பமானது. உடனே மறுநாளே திருட்டு விசிடியும் வெளிவந்தது. வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் படப் பெட்டிகளில் இருந்துதான் திருட்டு விசிடி தயாரகி தமிழ்நாட்டுக்குள் வரும். முதன் முறையாக தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள ஒரு தியேட்டரில் திருட்டு விசிடி தயாரிக்கப்பட்டிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த தியேட்டருக்கு தியேட்டர் அதிபர்கள் சங்கத்திலிருந்து ரெட்கார்ட் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி மற்றும் மஞ்சப்பை படத்தின் இயக்குனர் ராகவன் ஆகியோர் போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து இதுகுறித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.
பின்னர் விக்ரமன் நிருபர்களிடம் கூறியதாவது: திருட்டு விசிடியால் சினிமா உலகம் தொடர்ந்து ஆபத்தில் இருந்து வருகிறது. பெரும் நஷ்டத்தை சந்திப்பதால் சினிமா குடும்பங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. பொதுவாக வெளிநாட்டிலிருந்துதான் திருட்டு விசிடி வரும் என்பார்கள். ஆனால் மஞ்சப்பை படத்தின் திருட்டு விசிடி தமிழ்நாட்டில் சாத்தூரில் உள்ள ஒரு தியேட்டரில் தயாராகி உள்ளது. இது எங்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இனி யாரை நம்பி நாங்கள் படம் கொடுப்பது என்று தெரியவில்லை. கமிஷனரிடம் புகார் கொடுத்திருக்கிறோம். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார். என்றார்.