புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
திரு திரு துறு துறு படத்தில் அறிமுகமான சென்னை பொண்ணு ரூபா மஞ்சரி. அதற்கு பிறகு நான் படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக நடித்தார். சிறிய இடைவெளிக்கு பிறகு இப்போது சிவப்பு, யாமிருக்க பயமேன் படங்களில் நடித்து வருகிறார். தனது ரீ-என்ட்ரி பற்றி ரூபா கூறியதாவது: நான் சினிமாவில் தொடர்ந்து நடிச்சிட்டுதான் இருக்கேன். இடையில் மலையாள படங்களில் நடித்ததால் தமிழில் சின்ன கேப் விழுந்திருச்சு. இப்போ திரும்பவும் வந்திருக்கேன். அதனால் இதை ரீ-என்ட்ரின்னு சொல்ல முடியாது. மலையாளத்துல மல்லுசிங், டோர்னமெண்ட் படங்கள்ல நடிச்சிருக்கேன். தொடர்ந்து அங்கு வாய்ப்புகள் வந்தாலும் சொந்த மொழியில் நடிக்கிறதுதானே பெருமை.
சிவப்பு படத்தில் தமிழ்நாட்டில் வாழும் இலங்கை அகதியாக நடிச்சிருக்கேன். கட்டிட வேலை செய்ற பொண்ணு. கொஞ்சம்கூட மேக்அப் போடாமல் இயல்பா நடிச்சிருக்கேன். நிஜமாவே கல் சுமந்து, மண் சுமந்து நடிச்சேன். படத்துல நடிக்கிறப்போ நிஜமான சில இலங்கை அகதிகளை சந்திச்சு பேசினேன். அவுங்களோட கதைகேட்டு அழுதிட்டேன். படத்துல அழுகுற சீன் வரும்போதெல்லாம் அவுங்க சொன்ன கதையை நினைச்சுக்குவேன் நிஜமாவே அழுகை வந்துடும். யாமிருக்க பயமேன் த்ரில்லர் மூவி. கிருஷ்ணாவோட காதலியா நடிச்சிருக்கேன். இனி தமிழ் படங்களில் அதிகமாக நடிப்பேன். என்கிறார் ரூபா.