‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சின்னத்திரையின் தெனாவெட்டான நடிகை தேவிபிரியா. பரபரப்பு செய்திகளுக்கும் பஞ்சம் இல்லாதவர். தற்போது ரோமாபுரிப் பாண்டியன் தொடரில் அரசவைப்புலவரின் மகளாகவும், தளபதியின் காதலியாகவும் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: சேலை கட்டி நடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் வண்ண வண்ண உடைகள், உடல் முழுக்க நகைகள் அணிந்து நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது. நிஜத்தில்தான் மன்னர் குடும்பத்தில் பிறக்க வில்லை அப்படி நடிக்கவாவது வாய்ப்பு கிடைக்கிறதே என்ற சந்தோஷம்தான் அது. தொடரில் எனக்கு மிக முக்கியமான கேரக்டர்.
பாண்டிய நாட்டுக்கும், சோழ நாட்டுக்கும் தொடர்ந்து பகை. இருநாட்டின் உறவுக்காக இந்திர விழா நடக்கிறது. அந்த விழாவில் பாண்டிய நாட்டு தளபதி செழியன் கடத்தப்படுகிறார். இதனால் முன்னை விட பகை அதிகமாகி விடுமோ என்கிற பதட்டம் நிலவுகிறது. சோழ நாட்டு அரசவை புலவன் காரிகண்ணனாரின் மகளான நான் ஆண் வேடமணிந்து செழியனை மீட்கச் செல்கிறேன். செழியனை மீட்டு இரு நாட்டு பகையை எப்படி போக்குகிறேன் என்பது என் பகுதி கதை. அதில் செழியனோடு காதலும் கொண்டு விடுகிறேன். நான் நடிக்கும் இந்தப் பகுதி பரபரப்பாக போகும். என்கிறார் தேவிபிரியா.