‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
சின்னத்திரையின் தெனாவெட்டான நடிகை தேவிபிரியா. பரபரப்பு செய்திகளுக்கும் பஞ்சம் இல்லாதவர். தற்போது ரோமாபுரிப் பாண்டியன் தொடரில் அரசவைப்புலவரின் மகளாகவும், தளபதியின் காதலியாகவும் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: சேலை கட்டி நடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் வண்ண வண்ண உடைகள், உடல் முழுக்க நகைகள் அணிந்து நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது. நிஜத்தில்தான் மன்னர் குடும்பத்தில் பிறக்க வில்லை அப்படி நடிக்கவாவது வாய்ப்பு கிடைக்கிறதே என்ற சந்தோஷம்தான் அது. தொடரில் எனக்கு மிக முக்கியமான கேரக்டர்.
பாண்டிய நாட்டுக்கும், சோழ நாட்டுக்கும் தொடர்ந்து பகை. இருநாட்டின் உறவுக்காக இந்திர விழா நடக்கிறது. அந்த விழாவில் பாண்டிய நாட்டு தளபதி செழியன் கடத்தப்படுகிறார். இதனால் முன்னை விட பகை அதிகமாகி விடுமோ என்கிற பதட்டம் நிலவுகிறது. சோழ நாட்டு அரசவை புலவன் காரிகண்ணனாரின் மகளான நான் ஆண் வேடமணிந்து செழியனை மீட்கச் செல்கிறேன். செழியனை மீட்டு இரு நாட்டு பகையை எப்படி போக்குகிறேன் என்பது என் பகுதி கதை. அதில் செழியனோடு காதலும் கொண்டு விடுகிறேன். நான் நடிக்கும் இந்தப் பகுதி பரபரப்பாக போகும். என்கிறார் தேவிபிரியா.